வெள்ளி, 19 டிசம்பர், 2025

AITUC 65வது ஆண்டு விழா – டிசம்பர் 20ல் தூத்துக்குடியில் நடைபெறுகிறது

தூத்துக்குடி லீக்ஸ்” நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 


AITUC 65வது ஆண்டு விழா – டிசம்பர் 20ல் தூத்துக்குடியில் நடைபெறுகிறது

தொழிலாளர் உரிமைகளைக் காக்க உறுதிமொழி எடுக்கும் மாநாடு

தூத்துக்குடி, டிச. 19 :

இந்திய தொழிற்சங்க பேரவை (AITUC) 65வது ஆண்டு விழா மற்றும் தூத்துக்குடி ஹார்பர் ஓர்கர்ஸ் யூனியன் சார்பில் சிறப்பு மாநாடு வரும் 20.12.2025 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி பழைய துறைமுக சமூக நலக் கூடத்தில் (பீச் ரோடு) நடைபெறுகிறது.

thoothukudileaks


இந்த விழாவிற்கு AITUC மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்னணி தலைவர்கள், தொழிலாளர் இயக்கத்தின் மூத்த போராளிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

விழாவிற்கு R. பாண்டி தலைமை வகிக்க,
முன்னிலை:

  • A. பாலசிங்கம் – AITUC மாநில பொருளாளர்
  • G. ராஜ்குமார் – AITUC துறைமுக தலைவர்

வாழ்த்துரை:

  • M. ராதாகிருஷ்ணன்
  • S. காசி விஸ்வநாதன்
  • B.C.H. மசன்
  • S.S. சரவணன்
  • S. சீனிவாசராவ்
  • K. பிரகாஷ்ராவ்
  • P. கருப்பன் உள்ளிட்ட பலர்

சிறப்பு விருந்தினர்கள் ஆக INTUC, CITU, HMS, PETU, BTTS, TASMAC உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தொழிலாளர் உரிமைகள், ஊதிய உயர்வு, வேலை பாதுகாப்பு, துறைமுக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த கருத்துகளை பகிர உள்ளனர்.

65 ஆண்டுகளாக தொழிலாளர் நலனுக்காக போராடி வரும் AITUC-ன் வரலாற்றுச் சாதனைகள், எதிர்கால தொழிலாளர் இயக்கத்தின் பாதை குறித்து இந்த மாநாடு முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் தொழிலாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என தூத்துக்குடி ஹார்பர் ஓர்கர்ஸ் யூனியன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 


thoothukudileaks



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக