மதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 பிப்ரவரி, 2026

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைகோ மூன்று கோரிக்கைகள்கட்டபொம்மன் சத்திரம் பிரச்சினை? !

தூத்துக்குடி லீக்ஸ் | சனி, 28 பிப்ரவரி 2026

photo news by Arunan journalist 

சென்னை, 28 பிப்ரவரி:

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளை நேரடியாக எடுத்துரைத்தார்.

கோரிக்கை 1 — காயிதே மில்லத் பல்கலைக்கழகம்:

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். இதை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்தார்.

thoothukudileaks


கோரிக்கை 2 — சூரிய ஒளி இலவச மின்சாரம்:

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுப்பதை மத்திய அரசு தடுக்கும் நிலையில், சூரிய ஒளி மின்சாரம் மூலம் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என கோரினார். இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் உடனே தெரிவிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.

கோரிக்கை 3 — கட்டபொம்மன் சத்திரம் பிரச்சினை:

திருச்செந்தூரில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டபொம்மன் வாரிசுகள் பயன்படுத்தி வரும் கட்டபொம்மன் சத்திரத்தில் இந்த ஆண்டு நுழையக் கூடாது என அறநிலையத் துறை இணை ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளார். வேறொரு குடும்பத்தினர் கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா அவரின் கையெழுத்தை பொய்யாக பெற்று இந்த ஆணையை பெற்றுள்ளனர். இந்த ஆணையை உடனடியாக ரத்து செய்யுமாறு வைகோ முதலமைச்சரிடம் முறையீடு செய்தார்.

உடனடியாக அமைச்சர் சேகர்பாபுவிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தனிச் செயலாளருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மார்ச் 3ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆணை ரத்தாகும் என நம்புவதாக வைகோ தெரிவித்தார்.

— மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம், சென்னை-8, 28.02.2026


வியாழன், 10 ஜூலை, 2025

ஊடகத்தினர் மீது மதிமுக கொடூர தாக்குதல் ஊடக சுதந்திரம் தக்கவைக்கப்படும் வரை போராடுவோம் – பத்திரிகையாளர்கள் மீது வைகோவின் மதிமுக கட்சியினர் தாக்குதலுக்கு பாஜகவின் கடும் கண்டனம்"



தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
விருதுநகர் மாவட்டம் – 10 ஜூலை 2025

பத்திரிகையாளர் பாதுகாப்பு மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து தமிழக பாஜக மாநில பேச்சாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள கடும் கண்டன அறிக்கை:

“ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் நான்காவது தூண். அதை தாக்குவோர் ஜனநாயகத்தை முற்றிலும் நிராகரிப்பவர்களே. பத்திரிகையாளர்களை தாக்கிய எம்.டி.எம்.கே. தலைவர் வைகோ சட்டத்தின் முன்னால் கண்டிக்கப்படவேண்டும்” என பாஜக மாநில பேச்சாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

மாடல் மாதிரி படம் 


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற எம்.டி.எம்.கே. கூட்டத்தில், நிகழ்வில் காலியாக இருந்த நாற்காலிகளை புகைப்படமாக எடுத்த பத்திரிகையாளர்களை கட்சியினரால் தாக்கிய சம்பவம் குறித்து  தமிழக பாஜக மாநில பேச்சாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



“இந்த தாக்குதல் திட்டமிட்டு செய்யப்பட்டதாகவும், அதற்குத் தாயாராக்கியவர் நேரடியாக வைகோவாகவே இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது வேடிக்கையாக அல்ல, வெட்கமாக இருக்க வேண்டிய செயல்” என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்கள்

  • மனிவண்ணன் (பாலிமர் டிவி)
  • ஜெயராமன் (தமிழ் ஜனந் டிவி)
  • கருப்புசாமி (தந்தி டிவி)
  • பாலா (நியூஸ் தமிழ் டிவி)
    தாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இந்த தாக்குதலை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு மீது பரபரப்பான விமர்சனங்களை அவர் எழுப்பினார்.

“திமுக அரசு ஊடகங்களை ஆளும் ஆட்சி மீது விமர்சனங்கள் கூறக்கூடாது என்ற பாணியில் செயல்படுகிறது. 

இது ஒரு அதிநவீன பார்ப்பனீய, பாசிச போக்கு. வைகோவின் கட்சி, தங்களது முக்கியத்துவத்தை இழந்த நிலையில், திமுகவின் கருணையிலேயே உயிர் வாழும் ஒரு ‘லெட்டர்பேட் கட்சி’யாகவே மாறி விட்டது. அதற்கான சாட்சியே பத்திரிகையாளர்களை தாக்கும் வன்முறைக் காட்சி” என அவர் விமர்சித்தார்.

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“நாடு மற்றும் மாநிலத்தில் சிக்கல்கள், குற்றங்கள் குறித்து ஒளிரவைக்கும் பத்திரிகையாளர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு வருகின்றனர்.


 மணல் கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களை வெளிக்கொணர முயற்சிக்கும் ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. 


இது ஒரு அபாயகரமான சூழ்நிலையை உருவாக்குகிறது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடக்கக்கூடியதென்று உணர்ந்து, அதில் தண்டனை கிடைக்காத அளவுக்கு அரசியலமைப்பு செயல்படாது என்றால், அது ஜனநாயகத்தின் வீழ்ச்சியின் அறிகுறி" எனக் கூறினார்.

வைகோவின் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “CrPC சட்ட பிரிவுகளின் கீழ் முதன்மை குற்றவாளியாக அவர் கைது செய்யப்பட வேண்டும். அவரும், தாக்குதலில் ஈடுபட்ட எம்.டி.எம்.கே. நிர்வாகிகளும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை புறக்கணித்து வருவதாகவும், ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டிய பொறுப்பை தவிர்த்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

“அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்களுக்கு ஊடகங்கள் உரிமை உடையவை. அதனை அடக்கிச் செல்லும் எண்ணமே ஜனநாயகத்திற்கு எதிரானது. ஊடகங்கள் மீது கை வைக்கும் அரசு, எதிர்கால ஜனநாயகத்தின் மீது குத்துவைத்தது போல் தான்” எனவும் அவர் கூறினார்.


“உண்மையை எழுதும் பத்திரிகையாளர்கள் எப்போதும் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஆனால் உண்மை கூறுவதை நின்றுவிட மாட்டோம். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” என பாஜக மாநில பேச்சாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உறுதி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி லீக்ஸ்
உண்மை பேச்சும், நேர்மையான செய்திகளும்.

திங்கள், 19 மே, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுவுடன் கலந்துகொண்ட மதிமுக - மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை


தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுவுடன் கலந்துகொண்ட மதிமுக - மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், இன்சூரன்ஸ் தொகை, நிவாரணத் தொகை மற்றும் வேலிக்கருவிகள் அகற்றும் விவகாரங்களில் நேரடியாக கோரிக்கை வைத்தனர்.



இந்த கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ்  தலைமையிலான மதிமுக குழுவினர் பங்கேற்றனர். இதில் மகாராஜன் மற்றும் மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு உள்துறை மற்றும் வேளாண்மை துறையை சார்ந்த பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

மனுவில், விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் மற்றும் நிவாரணத் தொகைகள் விரைவில் வழங்கப்பட வேண்டும் என்றும்,  வேலிக்கருவை மரங்களை அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுவை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.


புதன், 7 மே, 2025

மதிமுக 32 வது ஆண்டு விழா தூத்துக்குடியில்கோலாகலமாக கொண்டாடப்பட்டது

Tamil Nadu updates photo news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி –

 மதிமுக 32வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) 32வது ஆண்டு விழா தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் அருகே அமைந்துள்ள மதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கட்சி கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் விழாவுக்கு தலைமை வகித்தார்.

விழாவின் ஒரு பகுதியாக, பழைய பஸ் ஸ்டாண்டில் பட்டாசுகள் வெடிக்கவிட்டு, பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

விழாவில் நிர்வாகிகள் பேச்சிராஜ், ரஞ்சன், கஜேந்திரன், நக்கீரன், முத்துசெல்வன், ராமசந்திரன், முருகபூபதி, மகாராஜன், சுந்தராஜ், ஆண்டாள், ராமுஅம்மாள், வீரபாண்டி சரவணன், ராஜ்குமார், ராஜசேகர், ஜெயக்கொடி, மோகன், பால்ராஜ், தொம்மை, முருகேசன், செந்தாமரைக் கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் மூலம்....

மதிமுக தொண்டர்களின் உற்சாகமும், ஒற்றுமையும் மெருகேறியது.

இதேபோன்ற நிகழ்வுகளை மற்ற பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதென மதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


வியாழன், 1 ஆகஸ்ட், 2024

மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி மதிமுக கோாிக்கை

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

2-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 


தூத்துக்குடி பழைய பேருந்துநிலையத்தில் பாத்ரூம், குடிதண்ணீர் வசதி கூடுதலாக அமைத்து தர மேயா் ஜெகன் பொியசாமியிடம் மதிமுக கோாிக்கை



       தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஓப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமின்றி மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகங்களில் பொதுமக்கள் நோில் சந்தித்து கொடுக்கும் மனுக்களுக்கு தங்களது கருத்துக்களை கேட்டறிந்து அதற்கும் அரசின் சட்டதிட்ட விதிகளின் படி தீர்வு கண்டு வருகிறார். 

     இந்நிலையில் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணப்பெருமாள், ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியை சந்தித்து அளித்து கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது “பழைய அண்ணா பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் பாத்ரூம் வசதி காணாத பட்சத்தில் தற்போது மேல்புறம் இருக்கும் ஆண்கள் பாத்ரூம் ஓரு வாரமாக மூடப்பட்டிருக்கிறது என்ன காரணம் என்று தொியவில்லை. இதனால் பொதுமக்கள் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தனியார் பேருந்து ஊழியர்கள் என பல்வேறு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதுபோல நல்ல சுத்தகாிக்கப்பட்ட குடிதண்ணீர் சாியாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் குடி தண்ணீர் இல்லாமலும் வேதனைபடுகிறார்கள். ஆகவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக பாத்ரூம் வசதி மற்றும் குடிதண்ணீர் வசதியை கூடுதலாக ஏற்படுத்தி தரும்படி மேயர் ஜெகன் பொியசாமியிடம் அளித்த கோாிக்கை மனுவில் கூறியுள்ளனர்.