போக்குவரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போக்குவரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளம் குறித்து அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் பரபரப்பு அறிக்கை

📰 தூத்துக்குடி லீக்ஸ் – 26.09.2025

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதியம் – செப்டம்பர் 30-ஆம் தேதியே வழங்க வேண்டும்: அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் வலியுறுத்தல்

சென்னை: செப் 26
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 2025 செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் விடுமுறை காரணமாக, வழக்கம்போல் ஊதிய நாள் ஒத்திவைக்கப்படும் நிலையில், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 30-ஆம் தேதியே ஊதியம் வழங்க வேண்டும் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

thoothukudileaks


அவரது அறிக்கையில்,
“அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊதியம் வழங்கும் நாள் அரசு விடுமுறை ஆக இருந்தால் அடுத்த வேலை நாளில் வழங்கப்படும் நடைமுறை உள்ளது. 


ஆனால், அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுதபூஜை மற்றும் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறை ஆக இருப்பதால், போக்குவரத்து தொழிலாளர்கள் சிரமத்தில் சிக்காமல், 2025 செப்டம்பர் மாத ஊதியம் செப்டம்பர் 30-ஆம் தேதியே வழங்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வெளியீட்டவர்:
ஆர். கமலக்கண்ணன்,
செயலாளர்,
அண்ணா தொழிற்சங்க பேரவை, சென்னை.


👉 

திங்கள், 24 பிப்ரவரி, 2025

அம்மா பிறந்த நாள் விழா

தூத்துக்குடி நகர பணிமனையில்....

அம்மா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி: புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாள் விழா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தூத்துக்குடி நகர பணிமனையில், அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



விழாவின் ஆரம்பத்தில், அண்ணா தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டன. தொழிலாளர்களுக்காக பணிமனையில் உள்ள உணவகத்தில் சிறப்பான உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல நிர்வாகி ராமசாமி தலைமையில், கிளை நிர்வாகிகள் ஆதிராஜ், வெள்ளையா, முத்துகிருஷ்ணன், முருகவேல், சண்முகராஜ், தொப்பை கணபதி, முருகேசன், இ. பேச்சிமுத்து, ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

உற்சாகம்!!!

மேலும், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் இணைந்து விழா நிகழ்வுகளில் உற்சாகமாக பங்கேற்றனர்.

வியாழன், 16 ஜனவரி, 2025

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பஸ் பயணிகள் கூட்டம் அதிகாரிகள் வராததால் குழப்பம்

 TamilNadu updates 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பஸ் பயணிகள் கூட்டம் இன்று (16-1-2025) அதிகாரிகள் வராததால் குழப்பம்


தூத்துக்குடி, ஜனவரி 16: 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பயணிகள் கூட்டம் 

16-1-2025 இன்று போக்குவரத்து அதிகாரிகள் பணிக்கு வராததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குழப்பமான சூழ்நிலை!!!

நேர காப்பாளர் அலுவலகம் பூட்டப்பட்டுள்ள நிலையில், அரசு போக்குவரத்து துறையின் நேர காப்பாளர்கள், செக்கர்கள் மற்றும் ஏஜென்டுகள் யாரும் பணிக்கு வராததால் பேருந்து நிலையத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.



கோவில்பட்டி, விளாத்திகுளம், மதுரை இராமநாதபுரம் திருச்சி திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வந்துள்ள பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.


 பேருந்துகள் எவ்வித ஒழுங்குமுறையும் இன்றி குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்பட்டுள்ளன. எந்தப் பேருந்து எந்த வழித்தடத்தில் எப்போது புறப்படும் என்ற அடிப்படை தகவல்களை கூட பயணிகளால் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி!!!

பண்டிகை காலத்தில் அதிகாரிகள் பணிக்கு வராதது  பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



 போக்குவரத்து துறை உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 14 நவம்பர், 2024

தூத்துக்குடி போக்குவரத்துறை RTO, டிராபிக் காவலர் கும்பகர்ண தூக்கம் களையுமா?

தூத்துக்குடி

போக்குவரத்துறை

RTO, டிராபிக் காவலர்கள் கும்பகர்ண தூக்கம் களையுமா? என்கிறார்கள்.

         

        தூத்துக்குடி மாநகரில் ஷேர் ஆட்டோ, மினி பேருந்துகள் அரசு விதிகளை மீறி செயல்படுகிறது.

2கிமீ 5 ரூபாய் தான் டிக்கெட் அது இங்கு இல்லை ஏன்?

       அரசு 2 கி.மீ தூரம் செல்ல 5 ரூபாய் கட்டணம் வசூலிக்க உத்திரவு வழங்கி உள்ளது.

ஆனால் இங்கு 10 ரூபாய் குறைந்து டிக்கெட் வழங்க மாட்டார்கள் ?

       தூத்துக்குடி மாநகரில் அரசு விதிகளை ஷேர் ஆட்டோ, மினி பேருந்துகள் தூக்கி எறிந்து செயல்படுகிறது.



      ஷேர் ஆட்டோவில் 5 பயணிகள், மினி பேருந்தில் 25 பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆடுமாடு போல மனுஷங்களை அடைத்து செல்லும் அவலம்!!!

        ஷேர் ஆட்டோ, மினி பேருந்தில் பயணிகளை ஆடு,மாடுகளை போல ஏற்றி அடைத்து செல்லப்படுகிறது.


இஷ்டம் போல வழித்தடம்!!!

       தூத்துக்குடியில் 25 மினி பேருந்துகள் செயல்படுகிறது. இந்த பேருந்துகள் அரசு அனுமதித்த வழித்தடம் செல்வதில்லை.

இட நெருக்கடி 

       அது போல தூத்துக்குடி அண்ணா பேருந்தில் RTO அனுமதி பெறாமல் மினி பேருந்துகள் செயல்படுவதோடு, தனி இடவசதி செய்யப்படுகிறது.


       இந்த அதிக எண்ணிக்கையில் தாறுமாறாக நிற்கும் மினி பேருந்துகளால் அண்ணா பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டு, விபத்துகள் உண்டாகுகிறது

       ஷேர் ஆட்டோக்களும் இது போலதான் செயல்படுகிறது. 

வழித்தடம் - போக்குவரத்து விபத்து ?


25 ஷேர் ஆட்டோ உரிமைதாரர்களுக்கு வழித்தடம் தேர்வு செய்யாததால்,....? போக்குவரத்து நெருக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது.

அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து கிளம்ப வேண்டுமா அதிகாரிகள் தூங்கி விட்டார்களா ?

தூத்துக்குடி வடபகுதியில் மற்றும் குறிப்பாக தூத்துக்குடி புதிய பேருந்து 

நிலையம் அங்கு இருந்து வழித்தடம் ஒன்று கூட இல்லையே ஏன்?



கனி ஹோட்டல் எதிரே அனுமதி வழங்காமலே ஷேர் ஆட்டோ நிறுத்துங்கள் 

     தூத்துக்குடி பால விநாயகர்கோவில்தெரு போக்குவரத்து நிறைந்த பகுதி, மேலும் பிரபல ஹோட்டல்கள், தங்கும் விடுதி, பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த இடத்திற்கு வந்து, செல்ல டிராபிக் (போக்குவரத்துறை) அனுமதி வழங்கவில்லை. 



இடையூறு!!!

ஆட்டோ நிறுத்தும் இடத்தில் ஷேர் ஆட்டோ ???

இந்த ஷேர் ஆட்டோ, ஆட்டோ நிறுத்துமிடத்தில் நிறுத்துவதோடு, விபத்து ஏற்படுத்தும் அபாய நிலை உண்டாக்குகிறது.

பேருந்து நிலைய வாயிலில் முன்பே ஷேர் ஆட்டோ ஏற்றி இறக்கி விடுவதால் ?

இதனால் அரசு பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் உள்ளே போக இடையூறு ஏற்படுகின்றன.

பொதுமக்கள் அவதி!!!

       தூத்துக்குடி போக்குவரத்துறை RTO, டிராபிக் போலீசார் தேவையற்ற வசதி ஏற்படுத்தி  தருவதால் பொதுமக்கள், பயணிகள் சொல்லமுடியாத அவலத்தை சந்தித்துவருகின்றனர்.

  தூத்துக்குடி போக்குவரத்துறை RTO, டிராபிக் போலீசாரின் கும்பகர்ண தூக்கம் கலைத்து விட்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.



செவ்வாய், 17 செப்டம்பர், 2024

சண்முகையா எம்எல்ஏ - அமைச்சர் சிவசங்கர் சந்திப்பு புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், குறுக்குசாலை புதிய வழிதடம் வே வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில்....

ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியூர்களில் கல்வி பயின்று வருகின்றனர்.



 அரசு ஊழியர்கள், மாணவர்கள், ஜவுளி வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு பணிகள் நிமித்தமாகவோ, கல்வி நிமித்தமாகவோ செல்வதற்கு நேரடியாக போதிய பேருந்து வசதிகள் இல்லை.



 தூத்துக்குடி சென்று அங்கிருந்து அரசு விரைவு பேருந்துகள் மூலமாக சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. 

வீண் அலைச்சல்?

நேரடியாக பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் அரசு ஊழியர்களும், வியாபாரிகளும், மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.!


ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் ஆகிய இரண்டு நகரங்களும் மதுரை - தூத்துக்குடி விரைவு சாலைக்கு இடையே மேற்குப்பகுதியில்  அமைந்துள்ளன. 

மாற்று வழி ஏற்பாடு?

தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை இயக்கப்படுகின்ற அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சில குறிப்பிட்ட பேருந்துகளை புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை வழியாக இயக்கினால் மாணவர்களும், அரசு ஊழியர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிய அளவில் பயன்பெறுவார்கள்.


கடிதம்?

 இதனால் கால விரையமும், அலைச்சலும், தேவையற்ற போக்குவரத்து செலவும் நிரந்தரமாக தவிர்க்கப்படும் அதனால் 

புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், குறுக்குசாலை என விரைவு போக்குவரத்து கழக புதிய வழித்தடம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்எல்ஏ வேண்டுகோள் வைத்து கடிதம் வழங்கினார்..!