தூத்துக்குடி நகர பணிமனையில்....
அம்மா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி: புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாள் விழா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தூத்துக்குடி நகர பணிமனையில், அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவின் ஆரம்பத்தில், அண்ணா தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டன. தொழிலாளர்களுக்காக பணிமனையில் உள்ள உணவகத்தில் சிறப்பான உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல நிர்வாகி ராமசாமி தலைமையில், கிளை நிர்வாகிகள் ஆதிராஜ், வெள்ளையா, முத்துகிருஷ்ணன், முருகவேல், சண்முகராஜ், தொப்பை கணபதி, முருகேசன், இ. பேச்சிமுத்து, ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
உற்சாகம்!!!
மேலும், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் இணைந்து விழா நிகழ்வுகளில் உற்சாகமாக பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக