📰 தூத்துக்குடி லீக்ஸ் – 26.09.2025
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதியம் – செப்டம்பர் 30-ஆம் தேதியே வழங்க வேண்டும்: அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் வலியுறுத்தல்
சென்னை: செப் 26
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 2025 செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் விடுமுறை காரணமாக, வழக்கம்போல் ஊதிய நாள் ஒத்திவைக்கப்படும் நிலையில், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 30-ஆம் தேதியே ஊதியம் வழங்க வேண்டும் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில்,
“அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊதியம் வழங்கும் நாள் அரசு விடுமுறை ஆக இருந்தால் அடுத்த வேலை நாளில் வழங்கப்படும் நடைமுறை உள்ளது.
ஆனால், அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுதபூஜை மற்றும் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறை ஆக இருப்பதால், போக்குவரத்து தொழிலாளர்கள் சிரமத்தில் சிக்காமல், 2025 செப்டம்பர் மாத ஊதியம் செப்டம்பர் 30-ஆம் தேதியே வழங்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வெளியீட்டவர்:
ஆர். கமலக்கண்ணன்,
செயலாளர்,
அண்ணா தொழிற்சங்க பேரவை, சென்னை.
👉
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக