TamilNaduupdates,
thoothukudinews,
தூத்துக்குடி அரசு மருத்துவமனை லஞ்சத்தில் மிதக்கிறது
பிரசவ வார்டு மற்றும் பொதுவார்டு பகுதிகள்
இதை எதுவுமே....
கண்டு கொள்ளாத மருத்துவமனை நிர்வாகம்????
இதனால்..
தமிழக அரசுக்கு கெட்ட பெயர் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுபற்றி செய்தியாவது
தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் அமைந்துள்ள பேறுகால வார்டு லஞ்சத்தில் சிக்கிய யுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், தாய்மார்களிடம் தவறாக பணம் கேட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
லஞ்ச விவரம்!!!
பிறந்த பிள்ளையை துடைத்து கொடுப்பதற்கு ரூ.500/- கேட்பது, தாய்மார்களை தள்ளுவண்டியில் கொண்டு செல்ல ரூ.200/- முதல் ரூ.100/- வரை வசூலிப்பது, மேலும் நோயாளியை படுக்கைக்கு மாற்றுவதற்கும் ரூ.100/- முதல் ரூ.200/- வரை பணம் கேட்பது போன்ற செயல்கள் அங்கு நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பங்கு உண்டா?? சந்தேகம்!!
இப்படி லஞ்ச வாங்குபவர்கள் அங்குள்ள உறைவிடம் மருத்துவர் மற்றும் மருத்துவமனை பொறுப்பு டீன் க்கு பங்கு கொடுக்கிறார்களா என பொதுமக்கள் சந்தேகம் எழுந்துள்ளது.
அவமானம்!!!!
“இங்கு தரமான சிகிச்சை கிடைக்கும் என்பதற்காகவே அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளோம். ஆனால் பணமின்றி இங்கு ஒரே அவமானமே அனுபவிக்கிறோம்,” என்று சில தாய்மார்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்வியாக உள்ளது. இதுகுறித்து பொது மக்கள் விரைவான நடவடிக்கை எடுத்திட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக