Tamil Nadu updates 9-3-2026
தூத்துக்குடி மார்ச் 9:
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார்.
பழங்குளம் ஊரில் இருந்து நாசரேத் – சாத்தான்குளம் நெடுஞ்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை ஓரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், பழங்குளம் ஊரில் உள்ள இரண்டு பொதுக் கிணறுகளுக்கு மேல்மட்ட மூடி அமைத்து குடிநீரை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட இன்று (09.03.2026) சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் இடம் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தட்டார்மடம் சகாய சீலன் மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.











