நாம் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாம் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 மார்ச், 2026

பழங்குளம் பகுதியில் தெரு விளக்கு, பொது கிணறு பாதுகாப்பு கோரி நாம் தமிழர் கட்சி மனு

Tamil Nadu updates 9-3-2026

தூத்துக்குடி மார்ச் 9:

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார்.

thoothukudileaks


பழங்குளம் ஊரில் இருந்து நாசரேத் – சாத்தான்குளம் நெடுஞ்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை ஓரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

thoothukudileaks


 மேலும், பழங்குளம் ஊரில் உள்ள இரண்டு பொதுக் கிணறுகளுக்கு மேல்மட்ட மூடி அமைத்து குடிநீரை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட இன்று (09.03.2026) சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் இடம் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தட்டார்மடம் சகாய சீலன் மனு அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

சனி, 12 ஏப்ரல், 2025

வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates

Photo news by Arunan journalist 

வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி:

வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடியில் இன்று (ஏப்ரல் 13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





தூத்துக்குடி 12வது வாசல், மையவாடி எதிர்புறம் உள்ள மைதானத்தில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கியது. 


இதில் மாநில மாணவர்பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அபுபக்கர் தலைமையேற்க, மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பு அலங்காரபரதர் மற்றும் குளாரியான்  நாடாளுமன்ற பொறுப்பாளர் கிங்ஸ்டன் ராஜசேகர் கலந்து கொண்டனர் 






ஆர்ப்பாட்டத்தில்  தூத்துக்குடி மண்டல செயலாளர்கள் இசக்கி துரை வேல்ராஜ், முன்னிலை வகித்தனர் 



செ. பரதேசி, தகவல் தொடர்பு செயலாளர் மாரிமுத்து, ஒட்டப்பிடாரம் கிழக்கு தொகுதி செயலாளர் அன்ன லட்சுமி, மேற்கு தொகுதி செயலாளர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "வக்ஃப் வாரிய சட்டம் பொதுமக்கள் உரிமைகளை மீறுவதாகும். இது அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர்.


---

திங்கள், 24 பிப்ரவரி, 2025

சீமானை விட்டு காளியம்மாள் விலகல் பரபரப்பு அறிக்கை

Tamil Nadu updates,

காளியம்மாள் பிரகாசன்
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
நாம் தமிழர் கட்சி
தேதி : 24.02.2025





இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன்..கட்சியில் பயணித்த
ஒவ்வொரு கணமும் உண்மையும். நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து
வந்தேன். 



இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது.
பல உறவுகள் அக்கா, தங்கையாகவும் அண்ணன், தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன்
பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன். 


நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான்,
தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும்.
அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில்
நான் பெருமை கொள்கிறேன்.


 ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும்
நினைக்கவில்லை, 


கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து
எவ்வளவு போராட முடியுமோ. என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும்,
நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். 



எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி,
வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை
மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். 

இங்கு பயணித்ததில் பலரின்
அன்பு, அக்கறை, நம்பிக்கை என்மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில்
நிலைநிறுத்தியுள்ளேன், 

வேதனை வேதனை!!!

என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த,
களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும், உண்மையான
உழைப்பாளர்களுக்கும், உலகத்தமிழர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு
என் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.



ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து பிறந்த இனத்துக்காக தமிழ்த்தேசிய களத்தில் ஓடிய என்மீது மிகுந்த
நம்பிக்கையும் அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த
நன்றிகள். 

நெருக்கடி!!!

எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள
நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக
இருந்தேன் 

வருந்துகிறேன்????

ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம்
வருந்துகிறேன். 


அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு
மத்தியில் என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும்
கடமை பட்டவளாக இருப்பேன். 


என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம்,எனக்கும் தான்.
காலத்தின் வழிநடத்தல்
என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்....
நன்றி,வணக்கம், 

இவ்வாறு தனது அறிக்கையில் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

பாடல் வீடியோ பார்க்க 

திங்கள், 2 செப்டம்பர், 2024

நாம் தமிழர் கட்சி உடைந்தது?!!! புரட்சி தமிழர் கட்சி உதயம்

நாம் தமிழர் கட்சி நடத்தி வருபவர் சீமான் 



  தமிழ் தேசிய தலைவர் வழியில் பின் தொடர்வதாகவும் இங்குள்ள மக்கள் பிரச்சினைகளில்  சீமான் பரபரப்பு அரசியல் பண்ணி வந்தார்.

சமீபகாலமாக இவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டு விமர்சனங்கள் கட்சி நிர்வாகிகள் மீதும் முன்பை விட தமிழக காவல்துறை நடவடிக்கை தொடர்ந்து பாய்ந்து கொண்டு இருக்கிறது .


இதனால்...

 நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது அதிருப்தியுடன் முக்கிய நிர்வாகிகள் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கின்றார்கள் 

இந்நிலையில்...

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள், ‘புரட்சித் தமிழர் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கினர்!



சென்னையில் கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து வைத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

சீமான் மீது குற்றச்சாட்டு !!!

மக்களிடம் இருந்து பெறப்படும் திரள் நிதியில் ...

சீமான் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக நாம் தமிழரில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் குற்றச்சாட்டு.



இதனால் நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

இலங்கை படையினரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி கலெக்டர் இடம் மனு அளித்தனர்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

12-8-2024

இலங்கை படையினர் கைது செய்த தருவை 22 மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் இடம் நாம் தமிழர் கட்சி யினர் மனு அளித்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.



எனவே இதனை கண்டித்து இன்று 12/8/25 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   மனு  அளித்தனர்.. 


நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

வே.வேல்ராஜ், தலைமையில்... மாவட்ட தலைவர் செயசீலன், பொருளாளர் செந்தில்குமார்,

தூத்துக்குடி தொகுதி செயலாளர் வே. மாரி சிவா,தொகுதி தலைவர்

பாக்கியராஜ், தொகுதி செயலாளர் தாமஸ், ஓட்டப்பிடாரம்

தொகுதி தலைவர்

வைகுண்டமாரி உட்பட தூத்துக்குடி மத்திய மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.