திங்கள், 2 செப்டம்பர், 2024

நாம் தமிழர் கட்சி உடைந்தது?!!! புரட்சி தமிழர் கட்சி உதயம்

நாம் தமிழர் கட்சி நடத்தி வருபவர் சீமான் 



  தமிழ் தேசிய தலைவர் வழியில் பின் தொடர்வதாகவும் இங்குள்ள மக்கள் பிரச்சினைகளில்  சீமான் பரபரப்பு அரசியல் பண்ணி வந்தார்.

சமீபகாலமாக இவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டு விமர்சனங்கள் கட்சி நிர்வாகிகள் மீதும் முன்பை விட தமிழக காவல்துறை நடவடிக்கை தொடர்ந்து பாய்ந்து கொண்டு இருக்கிறது .


இதனால்...

 நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது அதிருப்தியுடன் முக்கிய நிர்வாகிகள் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கின்றார்கள் 

இந்நிலையில்...

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள், ‘புரட்சித் தமிழர் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கினர்!



சென்னையில் கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து வைத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

சீமான் மீது குற்றச்சாட்டு !!!

மக்களிடம் இருந்து பெறப்படும் திரள் நிதியில் ...

சீமான் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக நாம் தமிழரில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் குற்றச்சாட்டு.



இதனால் நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக