தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

சலவை துறைக்கு வழங்கிய 1 கோடி மதிப்புள்ள நிலத்தை உரிமை கோரிய வழக்கு தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி பரபரப்பு தீர்ப்பு

 தூத்துக்குடி லீக்ஸ் 22-9-2023

த.சண்முகசுந்தரம் 

மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடியில் சலவை துறைக்கு வழங்கிய 1 கோடி மதிப்புள்ள நிலத்தை உரிமை கோரிய வழக்கு தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.



இது பற்றிய செய்தியாவது:-

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி நகராட்சிக்கு சலவை துறைக்காக மாப்பிள்ளையூரணி கிராமத்தில் ஒதுக்கிய சர்வே எண்: 223/6 நிலத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பகுதி நிலத்தை தங்களுக்குரியது என போலி பட்டா தாக்கல் செய்து உரிமை கோரி துரைசிங்கம் என்பவர் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மீது தாக்கல் செய்த வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

விசாரணை செய்த நீதிபதி சுமிதா மேற்படி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார். அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் சுபேந்திரன் ஆஜரானார். 

இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதன், 17 ஆகஸ்ட், 2022

தூத்துக்குடியில் ஒ பி.எஸ் ஆதரவாளர்கள் ஏசா துரை தலைமையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவிப்பு இடையூறு பண்ணி கலாட்டா செய்த எடப்பாடி ஆதரவாளரால் பரபரப்பு

ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியானதும் தூத்துக்குடியில் ஒ பி.எஸ் ஆதரவாளர்கள் ஏசா துரை தலைமையில்  பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர் .அப்போது இடையூறு பண்ணிய எடப்பாடி ஆதரவாளர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் ...

இதுபற்றிய செய்தியாவது:-

ஜூன் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் 

ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும்பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஆணையரை நியமிக்க வேண்டும்


எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு இன்று 11 மணியளவில் வந்தது



இத்தீர்ப்பை வரவேற்று அதிமுக ஒ பி பன்னீர்செல்வம் பொது மக்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஒபிஸ் லட்டு வழங்கி மகிழ்ச்சி



வீடியோ பார்க்க


இதையொட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒ பி.எஸ் ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதத்தில் ஏசாதுரை தலைமையில்  தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு தலைவர் களின் சிலை மாலை அணிவித்தனர்.

பழைய பேருந்து நிலைய பகுதி யில்

அப்போது அழக்கு சட்டை இரண்டு பையுடன் வந்த எடப்பாடி ஆதரவாளர் ஒருவர் இவர்களை பார்த்து படி  கலாட்டா பண்ணியபடி  உருண்டு படுத்து நகர மறுத்தார். பின்பு  அவரை போலீஸ் வந்து அப்புறபடுத்தினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.


 

புதன், 18 மே, 2022

பேரறிவாளன் விடுதலை தூத்துக்குடியில் தமிழர் விடியல் கட்சி தலைமையில் பட்டாசுவெடித்து இனிப்பு வழங்கினார்கள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்  இன்று (18-5-2022) விடுதலை செய்யப்பட்டார்.



 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பேரறிவாளனின் 31 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது. உலக தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் தமிழ் உணர்வுள்ள அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார் கள்.



 தூத்துக்குடியில் இன்று(18-5-2022 )மதியம் 2.00 மணியளவில் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே உள்ள அம்பேத்கார் சிலை முன்பாக 

தமிழர் விடியல் கட்சி தலைமையில் 

பட்டாசு வெடித்து , முழக்கங்கள் எழுப்பி , அப்பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்

மாவட்ட செயலாளர் தோழர் அசன்  

தமிழ்பு புலிகள் கட்சி 

மாவட்ட செயலாளர்

தோழர் தாஸ் , கத்தார் பாலு சரவணன்

மனிதநேய மக்கள் கட்சி

மாநகர செயலாளர்

தோழர் பிரவீன்

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாவட்ட செயலாளர்

தோழர் பிராசாத்

மற்றும் ,

தமிழர் விடியல் கட்சி

மாணவரணி பொறுப்பாளர் தோழர் டேவிட்ராஜ் ,பெஞ்சமின் , சுந்தர் ,

ராஜபாண்டி , 

மற்றும் தோழமை இயக்கங்களின் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வழக்கறிஞர் அரி ராகவன் நச் பதிவு பேரறிவாளன் விடுதலை! வரவேற்கிறோம் சகோதரா..

 பேரறிவாளன் விடுதலை!

வரவேற்கிறோம் சகோதரா... 

தூத்துக்குடி பிரபல வழக்கறிஞர் அரி ராகவன் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தீர்ப்பை வரவேற்று நச் யென்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 142 ல் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 31 ஆண்டுகால சிறைவாசத்திலிருந்து விடுவித்துள்ளது.




நீதிபதிகள்.நாகேஸ்வர ராவ், BR.கவாய், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் கவர்னரின் பரிந்துரைக்கு அனுப்பாமல் பேரறிவாளனை விடுவிப்பு செய்து தீர்ப்பளித்துள்ளது.


தமிழக அரசும் தொடர்ந்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி, நீதிமன்றத்தில் சிறப்பான வாதத்தை வைத்து சூழ்நிலையை சுமூகமாக்கியது.


எழுத்தாளர்கள், பிரபல்யங்கள் உட்பட காங்கிரஸில் உள்ள ஒரு சில தலைவர்களே ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதின் பின்னனியில் சுப்ரமணியன் சுவாமி, சந்திரா சுவாமி உள்ளிட்டவர்களின் சதியும், வல்லரசு நாடுகளின் பின்னனியும் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள். 

அந்த அடிப்படையில் CBl விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்றும் கூறி இருக்கிறார்கள்.

இவ்வளவு ஏன் சிபிஐ இயக்குனர் ராகவனே விசாரணை நேர்மையில்லாமல் ஒரு பக்க சார்பாக நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.


பேரறிவாளனை வெளியே விட்டிருக்ககூடாது, கொலைகாரனுக்கு கருணை காட்டக்கூடாது என்றும் நியாயம் பேசுவதாக நினைத்து, தேசத்தந்தை காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை கூட 17 ஆண்டுகளில் நிதிமன்றம் விடுதலை செய்துள்ளதை மறந்து சிலர் பேசுகிறார்கள்.


இன்றைக்கு கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கூட, பெளத்த சிங்கள மக்கள் இனப்படுகொலையில் இறந்தவர் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். தமிழ் மக்களின் ஆராத துயரத்தின் வலியை சிங்கள தேசம் மெல்ல உணர்ந்து வருகிறது.


இன்னும் இங்கே பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து விமர்சனம் செய்து வரும் சிலர் ராஜீவ் காந்தி படுகொலையில் மறைந்து இருக்கும், வெளிநாட்டு சதிகளையும் இணைத்து பார்க்க வேண்டும்.


மற்றபடி உச்ச நீதிமன்றம் கவர்னர் தலையில் கொட்டியுள்ளது. இது போதாது.

தமிழக மக்களும் ஆளுநரின் உச்சந்தலையில் "நங்" என்று சத்தம் கேட்குமாறு கொட்ட வேண்டும்.


அப்பதான் சில பிரச்சினைகளில் நேரங்காலத்தோட நமக்கு நீதி கிடைக்கும்.


கெ. அரி ராகவன்

வழக்கறிஞர்

தூத்துக்குடி

18.05.2022

செவ்வாய், 17 மே, 2022

பேரறிவாளன் விடுதலை உலக தமிழர்கள் மகிழ்ச்சி முழுவிவரம்

உலக தமிழர்கள் மகிழ்ச்சி...முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்  இன்று (18-5-2022) விடுதலை செய்யப்பட்டார்.


வரலாற்று சிறப்பு மிக்க இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பேரறிவாளனின் 31 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு அதிரடி தீர்ப்பு

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 142வது அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவந்த பேரறிவாளன் கடந்த 2022 மார்ச் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்..


இந்த நிலையில் தான் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கில் ..பேரறிவாளன் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.


1991 மே 21 :


சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார்.


1991 ஜூன் 11 :


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.



1991 ஜூன் 14 :


இந்த வழக்கில் நளினி, அவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன் கைது செய்யப்பட்டனர்.


1991 ஜூலை 22 :


மற்றொரு நபராக சுதேந்திரராஜா என்ற சாந்தனு கைது செய்யப்பட்டார்.


1998 ஜன 28:


இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்கியது.


1999 மே 11 :


சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. 19 பேர் தண்டனை காலத்தை நிறைவு செய்ததாக கூறி விடுவிக்கப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


1999 அக் 8:


தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென்று நான்கு பேரும் அனுப்பிய மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


1999 அக் 10:


தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர்.


1999 அக் 29:


அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி இவர்கள் நால்வரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.


1999 நவ 25:


உயர்நீதிமன்றம் ஆளுநரின் முடிவை ரத்து செய்ய வேண்டுமென்று கூறியதுடன் அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.


2000 ஏப் 19:


நால்வரின் தூக்கு தண்டனை குறித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில், நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது.


2000 ஏப் 24:


தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


2000 ஏப் 26:


நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.


2006 செப் 14:


பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதில் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரனுக்கு விடுதலை கிடைக்காததால், நளினி நீதிமன்றம் சென்றார்.


2000 – 2007:


மேற்கண்ட காலகட்டங்களில் குடியரசுத் தலைவர்களாக பொறுப்பு வகித்த கே.ஆர்.நாரயணன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோரிடம் தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தது.


2008 செப் 24:


நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டிலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


2008 மார்ச் 19:


ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, நளினியை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார்.


2011 ஆக 12:


தூக்கு தண்டனை கைதிகளான முருகன், சாந்தனு, பேரறிவாளன் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார். அந்தாண்டு செப்டம்பர் மாதம் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தகவல்கள் பரவியது.


2011 ஆக :


11 ஆண்டுகளாக தங்களுடைய கருணை மனுக்கள் நிலுவையில் இருந்ததால், தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும், இதனால் தங்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மூன்று பேரையும் தூக்கிலிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர், வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.


2014 பிப் 18:


நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பல ஆண்டுகள் எந்த காரணமுமின்றி மூன்று பேரின் கருணை மனுவும் நிலுவையில் இருந்ததால் அவர்களது மரண தண்டனையை ரத்து செய்வதாக உத்தரவிட்டது.


2014 பிப் 19:


தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மத்திய புலனாய்வுத்துறை விசாரித்திருப்பதால் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென்பதால் அவர்களுக்கும் தெரியப்படுத்துவதாகவும் அதிரடியாக அறிவித்தார். மூன்று நாட்களில் சிறையில் உள்ள 7 பேரும் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.


2014 பிப் :


தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு. 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க மத்திய அரசு தடையாணை பெற்றது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் விடுவிக்க முடியாது என மத்திய அரசு வாதம்.


2014 ஏப் 25:


இந்த வழக்கில் மத்திய – மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.


2015 டிசம் 2 :


சி.பி.ஐ. விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதேசமயம், 161வது பிரிவின்கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியது.


2016 பிப் 24:


தந்தை மரணம் காரணமாக முதன்முறையாக நளினி பரோலில் வந்தார்.


2016 மார் 2;


7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தமிழக அரசு.


2016 - தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். 


2017 ஆக 24:


சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பரோல் வழங்கியது.


2018 செப் 6 :


7 பேர் விடுதலை தொடர்பாக 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்தது.


2018 செப் 9:


சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்தது.


2018 செப் 9:


அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நேரில் சந்தித்தார்.


2019 ஜூலை 1 :


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்க கோரி ஆளுநருக்றகு நினைவூட்டல் கடிதம் அனுப்பியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்


2020 ஜன 14:


ராஜீவ்காந்தி கொலை வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி.


2020 ஜன 21:


குற்றவாளிகள் கருணை மனு மீது தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெரிவிக்க உத்தரவு


2020 நவ 23 :


பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு


2022 பிப் 11:


சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக பரோலில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு


2022 மார்ச் 9:


32 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த வழக்கில் முதன்முறையாக பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு 



2022 ஏப்ரல் 27 : பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற குழப்பம் நீடிப்பதால் அவரை ஏன் நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அமைச்சரவையின் பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாநில ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு.


2022 மே 4: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக வரும் 10-ந் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்தது.


2022 மே 11: ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையை அழிக்கும் வகையில் உள்ளது. பேரறிவாளன் மனுவை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப முடியாது; குடியரசுத் தலைவரை தொடர்புபடுத்தவும் முடியாது; தனக்கான கடமையை செய்யத் தவறியதோடு தேவையில்லாமல் குடியரசுத் தலைவரை இழுத்துவிட்டிருக்கிறார் ஆளுநர் என்று தமிழ்நாடு கடுமையாக வாதிட்ட நிலையில், தீர்ப்பு நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.


2022 மே 13 : பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக வாதம்


2022 மே 18: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.



பேரறிவாளன் விடுதலை: இந்த தீர்ப்பு எப்பொழுதோ கிடைத்திருக்க வேண்டும், இது கால தாமதம்தான்; ஆனால் மகிழ்ச்சி என்றார் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்.

உலக தமிழர்கள் மத்தியிலும் அதிர்வலைகள் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.