Tamil Nadu update
சென்னை, ஜூலை 13:
பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாததையும், போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தவெக அரசை கண்டித்தும், ஜூலை 18-ஆம் தேதி புள்ளம்பாடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை வலியுறுத்தும் வகையில், புள்ளம்பாடியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக