செவ்வாய், 25 ஜூன், 2024

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி !! ‌காங்கிரசும் திமுகவும் பாம்பும் தேளுமாக இருக்கிறது திருவண்ணாமலை யில் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் பரபரப்பு பேட்டி

  ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 26-6-2024 photo news 

by Roja arunan journalist 

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி !! ‌காங்கிரசும் திமுகவும் பாம்பும் தேளுமாக இருக்கிறது திருவண்ணாமலை யில் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் பரபரப்பு பேட்டியளித்தார். 



இது பற்றிய செய்தியாவது:-

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எரிந்த காங்கிரஸ் முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்த (ஜுன் 25)கருப்பு நாளை நினைவு கூறும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஆர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் மற்றும் மாநில பிரச்சார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.



அப்போது செய்தியாளர்களிடையே  பேசுகையில்....


 எமர்ஜென்சி என்று கூறுவதை விட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முடக்கப்பட்ட நாள் என்று கூறுவது தான் சரியாக இருக்கும். அரசியலமைப்பு சட்டத்தை குப்பைத் தொட்டியில் வீசிய நாள் 


 கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக இந்திய அரசியல் அமைப்பு சட்ட நூலை மாற்றப் போகிறார்கள் 


 பட்டியலில் இன மக்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய போகிறார்கள் போன்ற தவறான பிரச்சாரங்களை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மக்களிடையே பரப்பி வந்தனர். 


வி.பி.சிங் ஆட்சி காலத்தில் மண்டல கமிஷன் சட்டத்தினை ஆதரித்தது பாஜக அரசு 


ஆகவே அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஆட்சி செய்து வருவது பாஜக அரசு மட்டும் தான்.


 அது மட்டும் இல்லாமல் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை பெற்று தந்த கட்சி பாஜக தான் .

ஆனால்? அரசியல் அமைப்பு சட்டத்தை குப்பைத்தொட்டியில் எரிந்து அரசியலமைப்புச் சட்டத்தை வேரோடு சாய்த்த கட்சி காங்கிரஸ் கட்சி தான் 


இந்த காங்கிரஸ் கட்சி நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கு எதிராக இளைஞர்களுக்கு எதிராக எப்படி எல்லாம் துரோகம் செய்தது என்று இந்திரா காந்தி அம்மையார் ஆட்சி செய்த இரண்டு ஆண்டுகளில் கண்டது நாடு அப்பொழுது நாட்டின் மாபெரும் தலைவர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தது


 அத்தனை கொடுங்கோலையெல்லாம் எதிர்த்து தான் இன்றைய பாரதி ஜனதா கட்சி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று உள்ளது.


காங்கிரசும் திமுகவும் பாம்பும் தேளுமாக இருக்கிறாங்க...?

 இவர்கள் விஷ கடி விலங்குகள் போல இருப்பவர்கள் தற்போது ஒன்றாக கூட்டணி அமைத்து உள்ளார்கள்.


 காங்கிரஸ் கட்சியினால் மிசா காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி திமுக !!!


 ஆனால் இன்று திமுக காங்கிரசோடு கூட்டணி அமைத்துள்ளது


தற்போது ...தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவி வருகிறது 


மக்களை காக்க வேண்டும் என்பதற்காக தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது


 ஆனால்?

 தமிழகத்தில் திமுக மக்களை காக்கும் அரசாக ஆட்சி செய்யவில்லை மாறாக தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அரசியல் படுகொலைகள், கொள்ளை, கைதுகள், தற்போது தமிழகத்தில் கஞ்சா போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது


அது தவிர கள்ளச்சாராயம் இறப்புக்களால் உலக நாடுகள் மத்தியில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளனர்.

 இதனை தட்டிக் கேட்க முடியாத எமர்ஜென்சி நிலை தான் தற்போது தமிழகத்தில் உள்ளது.


 

பாஜக இவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்
.


 ஆனால் அதிமுக போராட்டத்தை சிவப்பு கம்பளம் போட்டு திமுக அரசு வரவேற்கிறது.


 பாஜகவினரை ஆர்ப்பாட்டம் செய்ய விடாமல் காவல்துறையினர் மூலம் கைது செய்து ஒடுக்கும் வேலை செய்து வருகிறார்கள்.


கருணாபுரத்தில் விஷ கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததில் திமுக எம்எல்ஏக்களுக்கு தொடர்பு இருக்கிறது எனவேதான் பாஜக தலைவர் அண்ணாமலை  சிபிஐ விசாரணை தேவை என்று கூறியுள்ளார்.




 எங்கே தங்களின் உண்மை முகம் வெளிவரும் என்று பாஜகவினரை கைது செய்வதும் அடக்குவதுமாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.  

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இன்று தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றார் கள்... 


இவ்வாறு பேட்டி அளித்தனர்.


பிரஸ் மீட் பேட்டியின் போது... 

 கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் எஸ். குணசேகரன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் சி .எழுமலை மாவட்ட பொதுச்செயலாளர் வினோத் கண்ணா .மாவட்ட பொருளாளர் எஸ் பி கே சுப்பிரமணியன் மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி. விஜய் .பிரச்சார பிரிவு மாவட்டத் தலைவர் ஆறுமுகம். திருவண்ணாமலை வடக்கு நகரத் தலைவர் புகழ் மூவேந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக