வெள்ளி, 1 மார்ச், 2024

ஸ்டெர்லைட் மூடல் தீர்ப்பை வரவேற்று நாம் தமிழர் கட்சி தூத்துக்குடியில் பொது மக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி கொண்டாட்டம்

 t░h░o░o░t░h░u░k░u░d░i░l░e░a░k░s░

           2-3-2024       11.00am

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடல் தீர்ப்பை வரவேற்று நாம் தமிழர் கட்சி தூத்துக்குடியில் பொது மக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி கொண்டாட்டம்



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடல்

 #உச்ச நீதிமன்ற தீர்ப்பு


 வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கடந்த 2024 பெப்ரவரி 29ம் தேதி பரபரப்பாய் வெளியானதும்... ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி மாநகரமெங்கும் பேரூந்து நிலையம் மற்றும் பல பகுதிகளில் மகிழ்ச்சி உடன் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடுவருகிறார்கள்



இந்நிலையில்

 2-3-2024 இன்று தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு 11 மணி அளவில் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமையில் நாம் தமிழர் கட்சி தோழர்கள் ஸ்டெர்லைட் நிரந்தர மூடல் தீர்ப்பை வரவேற்று பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு இனிப்பு லட்டு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்.

மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ் ,

தொகுதி தலைவர்கள் வைகுண்டமாரி, பாக்கியராஜ், முன்னாள் திருவைகுண்டம் தொகுதி செயலாளர் பட்டாணி , மற்றும் நிர்வாகிகள் சுப்புராம் ,ஜெபஸ்டின், கார்த்திக் ,ஜென்சன் , ரமேஷ் , சகாயம் , ரெஜிஸ்குமார் ,சாமிகாளை சில்வஸ்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சியில் 50 -க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக