தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் சிறப்புச் செய்தி
தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழா விமரிசை அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை!
தூத்துக்குடி: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழா இன்று (செப். 17) தூத்துக்குடியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
![]() |
| விடுதலைத்சிறுத்தைகள் |
![]() |
| திராவிட கழகம் |
![]() |
| திமுக |
![]() |
| புரட்சி பாரதம் |
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பாக அமைந்துள்ள தந்தை பெரியாரின் ஆளுயரத் திருவுருவச் சிலைக்கு திராவிடர் கழகம், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் திரளாக வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவில், பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் மற்றும் லட்டுகள் வழங்கப்பட்டு மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, "எந்தக் காலத்திலும் பெரியாரின் கொள்கைகள் நிலைத்து நிற்கும்" என்பதை வலியுறுத்தி, பெரியார் சிலைக்கு முன்பாக நிர்வாகிகள் அனைவரும் உணர்ச்சிப்பூர்வமாக உறுதிமொழி ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
![]() |
| பெரியார் உணர்வியலார் கூட்டமைப்பு |








