பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூலை, 2026

காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூலை 15:

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவருமான காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மை விசுவாசியும், முன்னாள் பெருநகரக் கழகச் செயலாளரும், முன்னாள் தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ். ஏசாதுரை தலைமை வகித்தார்.


thoothukudileaks


விழாவையொட்டி, அந்தோனியார் கோவில் அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும், சிவன் கோவில் அருகே மாவட்ட கழக அலுவலகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காமராஜரின் பிறந்தநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வி.டி. தங்கம், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மாரியப்பன், முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் இரா.இல. ஜெயராமன், முன்னாள் பகுதி கழகச் செயலாளர் வி.பி. முத்து, முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், முன்னாள் மேற்கு பகுதி எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கணேசன், முன்னாள் பாசறை தலைவர் மகாராஜன், சபிக்குமார் உள்ளிட்ட அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக (AIPTMMK) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

thoothukudileaks


விழாவில் கலந்து கொண்டவர்கள், கல்வி வளர்ச்சி, நேர்மை, எளிமை மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து அவரது புகழை போற்றினர்.



.

ஞாயிறு, 21 ஜூன், 2026

முதல்வர் ஜோசப் விஜய் 52-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் மா செ எஸ்டிஆர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஜூன் 22:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று காலை 11 மணியளவில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியினர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, முதல்வர் ஜோசப் விஜயின் நீண்ட ஆயுளும், மக்கள் பணியும் சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.



இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



thoothukudileaks

புகைபட விளக்கம்:

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முதல்வர் ஜோசப் விஜயின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.

பிறந்த நாள் வாழ்த்து பதிவு பிரபல திரைப்பட நடிகர் விஜய் அவர்களுக்கு இன்று 52 ஆவது பிறந்த நாள் 


அவர்களுக்கு நம் தூத்துக்குடி லீக்ஸ்  சார்பாக பிறந்தநாள் 

வாழ்த்துக்கள்

thoothukudileaks


முதல்வர் ஜோசப் விஜய் இது வரை....

சென்னையில் 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி எஸ்.ஏ. இயக்குநர் சந்திர சேகர், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு வித்யா என்ற ஒரு தங்கை இருந்தார். கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் தனது படிப்பை தொடங்கியவர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.


பின் சென்னை லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் படிப்பை தொடர்ந்தார். ஆனால் நடிப்பின் மீதிருந்த ஈர்ப்பால் பாதியிலேயே கைவிட்டார்.


விஜய் தன் ரசிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்


thoothukudileaks


விஜய் தன் சிறு வயதில் இருந்தே தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் படங்களில் நடித்துள்ளார். வெற்றி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.


இதன் தொடர்ச்சியாக கதா நாயகனாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார். இதையடுத்து, செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது. 


இதைத்தொடர்ந்து 90 களில் விஜய்யை நடிப்பின் உச்சத்தில் வைத்து தமிழ் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என ஏராளமான படங்களில் பெரும் புகழ் பெற்றார்.


90 களில் தொடங்கிய இந்த வெற்றிப்பயணம் 2000ஆம் ஆண்டுகளில் கில்லி, பிரியமானவளே, குஷி என கடைசியாக பீஸ்ட் வரை நீடிக்கிறது .


இப்படி தன் படங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி வைத்துள்ள விஜய் தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.


 அவர் 10 ,12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தியதே விஜய் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடக்கம் 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆரவாரப்படுத்தியது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.


அவர் கூறியபடியே சட்ட சபை தேர்தலில் வென்று தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வு பெற்று உள்ளார் 


தமிழக முதல்வராக பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலும் வாழ்த்துக்கள் இன்று தெரிவித்து வருகின்றனர்.


வியாழன், 11 டிசம்பர், 2025

தூத்துக்குடி மண்ணின் மைந்தர் பத்திரிகை யாளர்பாரதியார் பிறந்த நாள்… தூத்துக்குடி பிரஸ் கிளப் !

 தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி டிச11

தூத்துக்குடி மண்ணின் மைந்தர் மகாகவி பாரதியாருக்கு ரோஜாப்பூ மாலை… பத்திரிகையாளர்கள் புதிய உறுதி மொழி!!!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி
பாரதியின் தீப்பொறி வார்த்தைகளை நினைவூட்டும் விதமாக
செம்மையாக நடந்தது.

thoothukudileaks


தூத்துக்குடி மண்ணின் மைந்தர்கள் வ உ சிதம்பரனார் உடன் ஆங்கிலேயர் களை எதிர்த்து நின்ற பத்திரிகை போராளி மகாகவி பாரதியார்!!!

முதலில் பாரதியாரின் படத்திற்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து
மரியாதை செலுத்திய பிரஸ் கிளப் உறுப்பினர்கள்—
தலைவர் த. சண்முகசுந்தரம், துணை தலைவர் சிதம்பரம்,
உறுப்பினர்கள் இசக்கி ராஜா, மாணிக்கம், மாரிமுத்து உள்ளிட்டோர்—
தூத்துக்குடி மண்ணின் பெருமை மகாகவிஞருக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் உரையாற்றிய செய்தியாளர் த. சண்முகசுந்தரம்,
“பாரதியார் பிறந்த நாள் என்பது கவிஞரின் பிறந்த நாள் மட்டுமல்ல…
பத்திரிகையாளர்களின் எழுச்சி நாள்!
சாதி, மதம், பாகுபாடுகள் அனைத்தையும் தகர்த்தவர் பாரதி.
பெண்ணுரிமை முதல் தேசபக்தி வரை
சிந்தனைக்கு நெருப்பூட்டியவர்,” எனக் கூறினார்.

thoothukudileaks


அவர் மேலும்,
“பாரதியின் வரிகள் இன்னும் உயிரோடு இருக்கிறது.
நாம் அவர் வாழ்ந்த காலத்தில் இல்லை…
ஆனால் அவர் எழுதிய காலத்தை இன்று நாம்தான் வாழ்கிறோம்!
உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது
எங்கள் கடமை மட்டும் அல்ல… நமக்கு பாரதியாரின் கட்டளை!”
எனச் சொன்னார்.

thoothukudileaks


செய்தியாளர்கள் ஒன்றிணைந்து
உண்மை மற்றும் நேர்மையைக் காத்து செயல்பட வேண்டும் என
உறுதி மொழி பெறும்படி அவர் அழைப்பு விடுத்தார்.????

ரோஜா அருணன் 
செய்தியாளர், தூத்துக்குடி

வியாழன், 30 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் பசும்பொன் தேவர் ஜெயந்தி – குருபூஜை விழா தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A.அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 

பசும்பொன் தேவர் ஜெயந்தி – குருபூஜை விழா : மரியாதை செலுத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்

தூத்துக்குடி:அக்:-30
“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்ற தத்துவத்தை முன்வைத்து வாழ்ந்த தெய்வீக திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்  118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை விழா தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.



தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும், தேவர்காலனி பகுதியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்  A.அஜிதா ஆக்னல்  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த கௌதம் பாண்டியன், அருண்குமார், சிவகாமி முருகன், வழக்கறிஞர் நிர்மல்சிங், மனோ பாண்டியன், வாசுதேவன், அருண் பிரகாஷ், ஆகாஷ் பாண்டியன், மணிகண்டன் தீனதயாளன், அருள்ராஜ், அருண் பாலா, முனீஸ், மனோ பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலரும், மகளிர் திரளாக கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவில் தேவரின் தெய்வீக தத்துவங்கள் குறித்து பேசப்பட்டு, அவரின் தேசப்பற்றும் சமூகநீதிக்கும் பெருமை சேர்த்தது.

திங்கள், 14 ஜூலை, 2025

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி புத்தகத் தானம்

தூத்துக்குடி, ஜூலை 14


முன்னாள் தமிழக முதல்வரும் கல்விக்குத் தொண்டளித்தவருமான காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளி நூலகத்திற்கு புத்தகத் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.



பள்ளிகள் மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் நோக்கில், தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்றம் இணைந்து இந்நிகழ்வை ஒருங்கிணைத்தன.

அழைப்பு!!!

இந்நிகழ்வுக்காக பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகளிடம் நல்ல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை தானமாக வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. 

உதவி!!!

அந்த அழைப்புக்கு ஆதரவளித்து, ஆசிரியர் வள்ளிநாயகி மற்றும் கவிஞர் செல்வராஜ் ஆகியோர் புதிய புத்தகங்களை வாங்கி கொடுத்து உதவினர்.


இவ்வாறு சேகரிக்கப்பட்ட புத்தகங்களை, தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளி நூலகத்திற்கு, தலைமை ஆசிரியர் ஜேசு அந்தோணி மற்றும் ஆசிரியர் ராஜ்குமாரிடம், புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் மாரிமுத்து மற்றும் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் லாரன்ஸ் ஆகியோர் வழங்கினர்.


நிகழ்வில் ஆசிரியர்கள் நியூட்டன் மற்றும் செல்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.