அன்னதானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னதானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

சின்னகண்ணுப்புரம் லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

 📰 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்திகள்

தூத்துக்குடி சின்னகண்ணுப்புரம் லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 

தூத்துக்குடி சின்னகண்ணுப்புரம் அருள்மிகு ஶ்ரீ லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது.



இவ்விழாவை ஆலய பொறுப்பாளர் காளிதுரை  துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஆலய நிர்வாகிகள் கருப்பசாமி, பால சுப்பிரமணியன், கோவிந்த ராஜ், பழனிக்குமார், காளி முத்து, சுரேஷ், நடராஜன், கண்ணன், பால குமார், பரமசிவம், மாரிசெல்வி, ஜீவா, பாக்யலக்ஷ்மி, பூ இசக்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதனுடன் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு விநாயகரின் அருளைப் பெற்றனர்.

புதன், 27 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்

Tamil Nadu updates, photo news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி:ஆகஸ்ட் 27

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை போத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்பு அலங்காரத்துடன் மஹா அபிஷேகம் நடைபெற்றது 


பின்னர் நடைபெற்ற தீபாராதனையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, தா்மகா்த்தா ராஜா பொியசாமி, தொழிலதிபர் அசோக் பெரியசாமி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். 



பின்னர் 43 ஆண்டுகளுக்கும் மேல் கோவிலை வழிநடத்திய முன்னாள் தர்மகர்த்தாவும் எம்எல்ஏ-வும், திமுக மாவட்டச் செயலாளருமான பெரியசாமி திடலில் நடைபெற்ற அனைத்து தரப்பினரும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 





விழாவில் கோவில் செயலாளர்கள் செல்வராஜ், செல்வக்குமார், பொருளாளர் வேல்ச்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வம், ரத்தினசாமி, பேச்சிமுத்து, கமிட்டி உறுப்பினா்கள்  ஜீவானந்தம், ராஜாமணி, அசோக், ரவீந்திரன், கீதா முருகேசன், நாராயணன், பாஸ்கா்,  பாலமுருகன், சரவணன், தங்கச்சந்திரன், முருகேசன், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, ராம்குமார், ராஜேந்திரன், அர்ஜூனன், பெரியசாமி, செல்வக்குமார், சித்திரைச்செல்வன், இளஞ்சூரியன், பெரியசாமி, சேகர்மணி, 


கணேஷ், சண்முகசுந்தரம், முத்துராஜா, இளையராஜா, ராஜ்குமார், மாணிக்கம், இளைஞரணியினர் சக்திகணேஷ், சுரேஷ், மகேந்திரன், கண்ணன், கதிரவன், சுப்புராஜ், இசக்கிமுத்து, பால்ராஜ், பிரபாகரன், கற்குவேல் ராஜ், மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, ெபாதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, கவுன்சிலா் ஜாக்குலின் ஜெயா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, பெருமாள்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலா் பொியசாமி, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழாவில் மாபெரும் அன்னதான விழா

சேலம், ஆகஸ்ட்10

 - தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது. 


இந்த சக்தி வாய்ந்த மாரியம்மன் கோயிலின் திருவிழாவில் சேலம் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



மாபெரும் அன்னதான விழா


இந்த திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் நின்று அன்னம் பெற்று சென்றனர்.


 சிறப்பு அழைப்பாளர்கள்


இந்த அன்னதான விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட பெரியவர்கள்:


- அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனர் வாழும் கலியுக சித்தர் தவத்திரு சுவாமி இராமானந்தா

- சொர்க்கபுரம் ஆதீனம் 22-வது குருமஹா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ தண்டாயுதபாணி தேசிகர்

- கோட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல்

- செவ்வாய் பேட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நாகராஜன்


இந்த பெரியவர்கள் அன்னதான விழாவை தொடங்கி வைத்து ஆசிர்வதித்தனர்.


சங்க நிர்வாகம்


அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அருள்வேலன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த மாபெரும் அன்னதான விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களான சர்மிளா சரவணன், ரவிச்சந்திரன், வழக்கறிஞர் சுதன், பிரபு, ஶ்ரீதர், கீர்த்தி ஜெயகாந்த், கவிதா, காயத்ரி, சக்தி, மதியழகன், மஹாவிஷ்ணு, நேதாஜி, சுந்தரம், கதிர், சசிகலா, புவனேஸ்வரி, நித்தின், சாய், சத்யா, பாலாஜி, ராஜி, லதா, ஸ்ரீசனா, மைனாவதி, அருண் பிரசாத், அருண், ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தினர்.


இந்த திருவிழா தமிழகத்தின் பாரம்பரிய கோயில் கலாச்சாரத்தை பிரதிபலித்து, பக்தர்களின் மனங்களில் ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தியது.

சனி, 3 மே, 2025

ஒட்டப்பிடாரம் முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவில் அன்னதான தொடக்க விழா தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

Tamil Nadu updates 3-5-2025


முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவில் அன்னதான தொடக்க விழா
தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி | மே 3:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வருடாந்த கொடை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

 இவ்விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.



இந்நிகழ்வை தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல்  இன்று பக்திப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். 



பின்னர், அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கழகத்தினர் மற்றும் உள்ளூர் தொண்டர்களால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆன்மிக திருப்தியோடு அன்னதானம் பெற்றனர். விழா ஒருங்கிணைப்பில் கழகத் தோழர்கள் முக்கிய பங்காற்றினர்.

பக்தர்களின் வசதிக்காக சுத்தம், நீர் விநியோகம், நிழல் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் நன்க செய்யப்பட்டிருந்தன. 

விழா நாட்களில் மேலும் பல ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா

Tamil Nadu updates,

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.




கரூர்: தமிழகத்தின் முக்கிய தைப்பூச திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் கரூர் மாவட்டம் குளித்தலையில் இந்த ஆண்டு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பழனிக்கு அடுத்து அதிக பக்தர்கள் வருகை தரும் இந்த விழாவில், திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு ஊர் கோயில்களின் உற்ஸவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் காவிரி நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, புனித நீராடிய பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



விழாவின் முக்கிய நிகழ்வாக, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இரண்டு நாட்கள் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று அன்னம் பெற்றுச் சென்றனர்.


இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி திருஈங்கோய்மலை ஶ்ரீ லலிதா மகிளா சமாஜத்தின் சிவபிரியாம்பா மாதா ஜி, ஜெயாம்பா மாதா ஜி, கீதாம்ருதாம்பா மாதா ஜி, குளித்தலை சாந்திவனம் ஆசிரம தலைவர் டாட்ரீக் சுவாமி ஜி, கிராமியம் நாராயணன் மற்றும் வாழைக்காய் வியாபாரி சேட் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.



சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனையின்படி, இந்த மாபெரும் அன்னதான விழாவின் ஏற்பாடுகளை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், கருணாநிதி, சுந்தரேசன், ஆனந்த், வெங்கடேஷ், தியானேஷ்வரன், அர்ச்சகர் கல்யாண வெங்கட்ராமன், அர்ச்சகர் மஹா விஷ்ணு, தினார்த், சந்தோஷ், கோபி, சங்கரன், சரவணன், திருமுருகன், முத்து, சரவணன் ஜி, வீரப்பன், மணி, தினேஷ், முகிலன், கருப்பத்தூர் முரளி செந்தில், தமிழ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


விழாவில் பங்கேற்ற பக்தர்கள், இதுபோன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென வாழ்த்தினர்.