தூத்துக்குடி, : அக் 16
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்காக தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் சிறப்பு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்தியாவில் ஒளியின் வெற்றியை குறிக்கும் முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப்படும் தீபாவளி தினத்தை முன்னிட்டு, பத்திரிகை துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் 26 வகையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் 5 கிலோ அரிசி பை, ஹாட் பாக்ஸ், ரவை, மைதா, பட்டாசு, சீனி, உளுந்தம்பருப்பு, கடலைபருப்பு, மசாலா வகைகள், தேங்காய், கடலைமிட்டாய் உள்ளிட்ட 26 பொருட்கள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரிராஜா, இருதயராஜ், முத்துராமன், ராஜன், லெட்சுமணன், சட்ட ஆலோசகர்கள் சரவணன், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழங்கினர்.
மேலும், உறுப்பினர்கள் முரளி கணேஷ், மாணிக்கம், மாரிமுத்து, நீதிராஜன், ஜெயராம், கார்த்திகேயன், நடராஜன், அறிவழகன், இசக்கிராஜா, காதர்முகைதீன், சந்தனரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தீபாவளி நல்வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
நிகழ்ச்சி முழுவதும் உற்சாகம் நிறைந்ததாக இருந்து, ஊடகத்துறையினரிடையே ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது.
📰 – தூத்துக்குடி லீக்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக