செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடி – உயிரைப் பணயம் வைத்து வீரத்துடன் செயல்பட்ட பெண் சார்பு ஆய்வாளர்

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் சாலையில் ..

நேற்று (11.08.2025) மாலை நேரத்தில், இரண்டு நபர்கள் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்த சம்பவம் நடைபெற்றது.

அங்கு ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர்  தரணியா, அச்சம்பவத்தை கண்டு..., 

தனது உயிரைப் பொருட்படுத்தாமல் உடனடியாக தலையிட்டு, இருவரையும் தடுத்து நிறுத்தினார்.

thoothukudileaks
Model photo

அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்ததுடன், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thoothukudileaks
தூத்துக்குடி – உயிரைப் பணயம் வைத்து வீரத்துடன் செயல்பட்ட பெண் சார்பு ஆய்வாளர் தரணியா வுக்கு தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு சான்றிதழ் வழங்கும் போது எடுத்த படம் 


உயிரைப் பணயம் வைத்து விரைந்து செயல்பட்டு, அசம்பாவிதத்தை தடுத்தும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை ஏற்பாடு செய்தும் சிறப்பாக பணியாற்றிய சார்பு ஆய்வாளர் தரணியாவை, இன்று (12.08.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப , பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக