Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி: 2025ஆகஸ்ட் 17
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று (17.08.1962) தனது 63-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் பிறந்த திருமாவளவன், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக களத்தில் இறங்கிய அரசியல்வாதி, பேச்சாளர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல தளங்களில் செயல்பட்டு வருகிறார். தற்போது சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
திருமாவளவனின் அரசியல் பயணம் 1980-களில் தொடங்கியது. பின் "விடுதலைச் சிறுத்தைகள்" என்ற பெயரில் தனித்துவமான கட்சியை உருவாக்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் கொடுத்தார். 2001-ல் சட்டமன்ற உறுப்பினராகவும், 2009, 2019, 2024 ஆகிய மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வானவர்.
தமிழகத்தில் சாதிய அடக்குமுறைக்கு எதிரான குரலாகவும், தமிழீழ விடுதலை, சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றின் முன்னோடியாகவும், திருமாவளவன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். “நான் ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுப்பவன்” என்பதே அவரின் அரசியல் வாழ்வின் அடிப்படை கோட்பாடு.
இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, விசிக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழர் எழுச்சி நாளான இன்றைய தினத்தில், தூத்துக்குடி லீக்ஸ் சார்பாகவும்,
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 🎉

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக