அரசு பேருந்துகள் ராமசாமிபுரம் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி, ஏப்ரல் 8:
திருச்செந்தூரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமசாமிபுரம் மற்றும் முத்துநகர் கிராமங்களில் சுமார் 200 வீடுகளும், 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் வேலைக்குச் செல்வோர், தினமும் திருச்செந்தூர், சாத்தான்குளம், திசையன்விளை, நாகர்கோவில், திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
ஆனால், ராமசாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நாகர்கோவில் மற்றும் திசையன்விளை நோக்கிச் செல்லும் அரசு பேருந்துகள் நிற்காததால், அப்பகுதி மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று திருச்செந்தூர் பேருந்து நிலையம் அடைந்து பஸ்சில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் மோசமான கால விரயம் மற்றும் போக்குவரத்து சிரமங்களை சந்திக்கிறார்கள்.
இதனால், “ராமசாமிபுரம் பஸ்ஸ்டாப் அரசு பேருந்துகள் நிற்கும் இடமாக அறிவிக்கப்பட வேண்டும். அங்கு அனைத்து அரசு பேருந்துகளும் நின்று பொதுமக்களை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கையுடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம், தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் இன்று திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் சூசைமுத்து, அருள்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மகளிர் அணி தலைவி சந்திரா, மாநகரச் செயலாளர் உதயசூரியன், விவசாய அணி துணைச் செயலாளர் சின்னத்துரை, முருகன், சுந்தர் உள்ளிட்ட பலர் சமர்ப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக