தூத்துக்குடி, ஏப்ரல் 29:
போன்சாய் புக்ஸ் நிறுவனத்தின் சார்பில் எழுத்தாளர் தங்கத்துரையரசி ஏற்பாடு செய்திருந்த 'வாசகம்' என்ற உரையாடல் நிகழ்வு நேற்று தூத்துக்குடியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் கண்மணிராசா எழுதிய 'கூத்து' சிறுகதைத் தொகுப்பு குறித்து வாசகர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த விழாவில் போன்சாய் புக்ஸ் நிறுவனத்தின் ப்ரியதர்ஷினி, சிறார் எழுத்தாளர் வரகவி முருகேசன், ஜீவா சுரேஷ், மாரிச்செல்வி, மகாலட்சுமி, இந்துமதி ஆகியோருடன் பிரபல எழுத்தாளர்களான ராம்சித்ரா, பொன்னு லட்சுமி, மழயிசை, உஷா, பத்மா சிங்கராயன், முகிலன், முத்து முருகன், தினகரன், குமரேசன், செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தொகுப்பிலுள்ள கதைகள் குறித்து விரிவாக உரையாடினர்.
எழுத்தாளர் கண்மணிராசா நிகழ்வின் தொடக்கவுரை நிகழ்த்தினார், மற்றும் நிகழ்வின் இறுதியில் ஏற்புரையும் வழங்கினார். பாடகர் சந்திரசேகர் இசை நிகழ்ச்சி வழங்கினார். கல்லூரி முதல்வர் திரு. காமராஜ் அவர்கள் சிறப்புக் கருத்துரை வழங்கினார். கவிஞர் மாரிமுத்து நன்றியுரை கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
"ஒரு படைப்பைக் குறித்து புதிய வாசகர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டது இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது," என நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு வாசகர் தெரிவித்தார்.
இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகள் தூத்துக்குடியில் தொடர்ந்து நடைபெறும் என போன்சாய் புக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக