திங்கள், 5 ஆகஸ்ட், 2024

தங்க செயின் தொலைத்த சிறுமி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் தொலைந்த தங்க செயின் திருப்பி கொடுத்த காவல்துறை!!!


▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-8-2024 photo arunan 

news by sunmugasunthram Reporter 

தங்க செயின் தொலைத்த சிறுமி 

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் தொலைந்த  தங்க செயின் திருப்பி கொடுத்த காவல்துறை!!!

இதுபற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலயம் பத்தாவது நாள் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.



இதையொட்டி இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் பக்தர்கள் மட்டுமல்ல  இலங்கை பிரான்ஸ் போன்ற வெளிநாட்டு பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர் 


இதனால் பனிமய மாதா தரிசிக்க...ஆலய பகுதியில் சுற்றிலும் நெருங்கவே ரொம்ப நெரிசலாக வாகனங்கள் செல்ல இயலாது பொதுமக்கள் பக்தர்கள் அனைவரும் நடந்து தான் செல்ல நேரிடுகிறது.


இன்று 5-8-2024 காலை ஆராதனை ஆலயத்தில் மாதாவை தரிசிக்க குடும்பத்துடன் வந்தார் தூத்துக்குடி கிருஷ்ணா ராஜா புரம் தெருவை சேர்ந்த விவேக்.

 பனிமய மாதாகோவில் தென்புறம் வந்த போது தனது மகள் ஹர்ஷா ( வயது 9)சிறுமி அணிந்து இருந்த தங்க செயின்  எப்படி யோ? இந்த கூட்டத்தில் 

தவறிவிட்டார் .



அந்த நேரத்தில்... அவ்வழியே வந்த தூத்துக்குடி சண்முகபுரம் அந்தோனி (வயது 43) என்பவர் கண்ணில் தட்டுப்பட்டது .

உடனே அந்தோனி 

மேற்படி 9 கிராம் டாலர் செயின் கீழே கிடப்பதாக மாதா கோவில் புற காவல் நிலையத்தில் கொண்டு போய் ஒப்படைத்தார்.


அப்போது தனது மகளுடன் பதற்றமாக புகார் தெரிவிக்க வந்த விவேக் இடம் உங்கள் செயின் கிடைத்து விட்டது அந்தோனி இவர் தான் கண்டெடுத்து ஒப்படைத்தார் என்று கூறி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்  சுப்பிரமணியன் உரியவர் இடம் கொடுத்தார்.


தொலைந்த தங்க செயின்  கிடைத்த குடும்பத்தினர் பனிமய மாதா தான் உங்கள் இருவரின் முலம் கிடைக்க செய்துள்ளார்கள் என்று நன்றி தெரிவித்து சென்றனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக