செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடி செய்தியாளர்களின் தந்தை 50-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிவன் கோவிலில் அன்னதானம் வழங்கினார்கள்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

6-8-2024 

photo news by arunan journalist 

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் மகன் கனகராஜ், ,வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் உத்திரபாண்டி ஆகியோரின் தந்தையும், செய்தியாளர் ரேகா-வின் மாமனாருமான ஆ.தங்கமணி நாடாரின்  50-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.



இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் உடனுறை சிவன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. 



மேலசண்முகபுரம் ஆ.தங்கமணி நாடாரின்  50-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து நடைபெற்ற அன்னதானத்தை அவரது மகள் மல்லிகா, மகன் கனகராஜ், மகள் ஜெயலெட்சுமி, மருமகன்கள் மாசிலாமணி, அஜய்கோஷ், மருமகள்கள் பிரேமா, ஹேமா ஆகியோர் துவக்கி வைத்தனர். 




கோவில் பூஜை வீடியோ பார்க்க!!!

அடுத்ததாக தூத்துக்குடி சிவன் கோயிலில் இவர்களது குடும்பம் சார்பில் அங்குள்ள வர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். 

இந்நிகழ்வில் மகன்கள், மகள்கள், மருமகள்கள்;, மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் உள்பட குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக