செவ்வாய், 16 ஜூலை, 2024

காமராஜர் பிறந்த நாள் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பத்திரகாளியம்மன் கோவில் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பத்ரகாளியம்மன்

கோவிலில் நேற்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அன்னதானம் நடைபெற்றது.

  அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.



இது பற்றிய செய்தியாவது:-

      தூத்துக்குடி காமராஜர் 122வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.


 பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார்.


    உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி சேர்மபாண்டியன், கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்சலின், வட்டச்செயலாளர் அசோக்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா்,  மற்றும் கோவில் தர்மகர்த்தா ஆறுமுக பாண்டியன் காரியதரிசி தங்ககுமார் மற்றும் மணி, அல்பட், உள்பட பலா் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக