சனி, 6 ஜூலை, 2024

அண்ணாமலை வைத்துஅ.தி.மு.க.வை அழிக்க முயற்சி தடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் புகார்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

6-7-2024


பி.ஜே.பி அண்ணாமலை வைத்து

எடப்பாடியார் முதுகில் குத்துகிறது. அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி !!

அதிமுக வினர் விழிப்போடு இருப்போம் 

தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஜூலை 7

       பி.ஜே.பி. கட்சி எடப்பாடியார் முதுகில் குத்துகிறது... அண்ணாமலை வைத்து அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி செய்து வருவதாக ..தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், துணைச்செயலாளர் கே.மிக்கேல் புகார் கூறினார்.

         இது குறித்து தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், துணைசெயலாளர் கே.மிக்கேல் ஆகியோர் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

         அதில் கூறியுள்ளதாவது.......

      பாரத ரத்னா புரட்சித் தலைவர் தொடங்கிய அ.தி.மு.க.வை அவரது மறைவிற்கு பின் புரட்சி தலைவி ஜெயலலிதா  காத்தார்.



 பின் அதனை தொடர்ந்து... பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அதிமுக சிறப்பாக வழி நடத்தப்படுகிறது.


       53ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த இயக்கம் அண்ணா தி.மு.க.தான்.

    தமிழகத்தில்

பி.ஜே.பிக்குஅரசியல் அங்கீகாரம் பெற்று தந்த இயக்கம்  அ.தி.மு.க.தான். 


 பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில்  அ.தி.மு.க.வை பி.ஜே.பி. கட்சி அழிக்க முயற்சி செய்தது.


பிஜேபி பினாமிகள் !!!

       பி.ஜே.பி. பினாமிகளான ஓ.பி.எஸ்.

டி.டி.வி.தினகரன்,

 சசிகலா...

இவர்களை வைத்து கடசியை உடைக்க பார்த்தது.



       நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி. சேர்ந்தஅண்ணாமலை விரைவில் அ. தி.மு.க. டி.டி.வி.தினகரன் கைக்கு வந்து விடும் என்றார்.

அண்ணா மலை ராசி அப்படி?

       அண்ணாமலை

பி.ஜே.பி கட்சி வந்தது முதல் அந்த கட்சிக்கு தோல்விதான் பரிசு..


 2019 நாடாளுமன்ற தேர்தலில்323  இடங்களில் வென்ற பி.ஜே.பி 2024 எம்.பி.தேர்தலில் 240 இடங்களில் வென்று மைனாரிட்டி அரசை பி.ஜே.பி நடத்துகிறது.


        கர்நாடகா எம்.எல்.ஏ.தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.


 ஆட்சியில் இருந்த பி.ஜே.பி.அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.


       11 கட்சி கூட்டணி வைத்து பி.ஜே.பி ஓட்டு சதவிகிதம் கூடிவிட்டது என சொல்லி மக்களை ஏமாற்றுகிறது. தமிழகத்தில் 23 இடங்களில் பி.ஜே.பி. டெப்பாசிட் இழப்பு.

       பி.ஜே.பி தலைவர்கள்  அ.தி.மு.க.விற்கு அழைப்பு சொல்லி,  பொதுச்செயலாளர் எடப்பாடியர் முதுகில் குத்தி,அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி செய்தது.

  பி.ஜே.பி. ஜால்ரா ஓ.பி.எஸ்.டி.டி.வி தினகரனை வைத்து பச்சோந்திஅண்ணாமலை அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்தார்.

பிஜேபி கணிப்பு 

         அதிமுகவை உடைத்துஇரட்டை இலை சின்னத்தை முடக்கினால்2026 சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி.வெற்றி பெறலாம் கனிப்பு போட்டு வருகிறது.

        தமிழகத்தில் 8 முறை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர். மாநில முதல்வர்கள் வந்தும் தமிழக மக்கள் அவர்களை புறக்கணித்துவிட்டனர். 

       2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணா திமுக மிகப்பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சியில் அமரும், துரோகிகள் எண்ணம் நிறைவேறாது.

       இவ்வாறு  கூறியுள்ளனர்.

      

        

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக