திங்கள், 8 ஏப்ரல், 2024

பறக்கும்படை அதிகாாி கலெக்டர் லட்சுமிபதி கண்டுகாௌ்வாரா?

 thoothukudileaks 10-4-2024

photo news by sunmugasunthram Reporter 

தூத்துக்குடி மாவட்டத்தில் எல்லைமீறும் பறக்கும்படை !!! தேர்தல் அதிகாாி கலெக்டர் லட்சுமிபதி கண்டுகாௌ்வாரா?



          தூத்துக்குடி இந்தியாவில் 17வது மக்களவை தேர்தல் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நடைபெறவுள்ளது.


 இதில் தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஓரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெறுகிறது.


 தேசிய அரசியல் கட்சி மட்டுமின்றி மாநில கட்சிகள் மற்றும் பல்ேவறு பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் வேட்பாளராக களம்இறங்கி பல்ேவறு வாக்குறுதிகளை அளித்து சுட்டொிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. 


தேர்தல் ஆணையம் எவ்வித ஆவணமின்றி 50 ஆயிரம் வரை எடுத்துச்செல்லலாம் அதற்கு மேல் கொண்டு செல்லும் பணத்திற்கும் பொருட்களுக்கும் ஆவணங்களுடன் கொண்டு சென்றால் அதை முறையாக சம்பந்தபட்டவர்களிடம் வழங்கப்பட்டு ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம் பொருட்களை பறிமுதல் செய்து மாவட்ட தேர்தல் அதிகாாி கவனத்திற்கு கொண்டு சென்று கையகப்படுத்தி வருகின்றன. 


இதற்கு சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு ஆதாரம் காண்பிக்கப்பட்ட பின் பல பொருட்களும் பணமும் திரும்ப ஓப்படைக்கும் நிலையும் இருந்து வருகிறது.


 ஆனால் இந்த பாிசோதனைக்கு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த சில ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் எல்லையை மீறி கடமைக்கு பணியாற்றுவது மட்டுமின்றி சில இடங்களில் காவல்துறையினாின் அறிவுரைகளை யும் மீறி மிகப்பொிய அடக்கும் முறையை கையாண்டு வருகின்றனர். 

பல கோடிகள் சர்வசாதாரணமாக பல வழிகளிலும் சில இடங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. 


அதற்கெல்லாம் சிலர் துணை போகும் நிலையில் யானை செல்வது சிலருக்கு ெதாிவதில்லை பூணை செல்வது தான் தொிகிறது. என்ற பழமொழிக்கேற்ப தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாாியுமான லட்சுமிபதி தலைமையின் கீழ் செயல்படும் பல்வேறு அதிகாாிகள் குழு இரவு பகல் பாராமல் சூழற்சி முறையில் பணி செய்வது பாராட்டுக்குாியது தான்

 அதே வேளையில் சில இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் சோதனைகளில் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி சாதாரண தினக்கூலி தொழிலாளா்கள் வரை விட்டு வைக்காமல் சோதனை என்ற பெயாில் கைப்பற்ற பட்ட பொருட்களில் மதிப்பீடு தொியாமல் அதை குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்து தான் வேதனையாக வுள்ளது என்று பலர் புலம்பும் நிலையுள்ளது. 


சில தினங்களுக்கு முன்பு தென்பாகம் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வாகனை சோதனையின் போது திமுக ஓன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான அவருடைய வாகனத்தை சோதனை செய்துள்ளனர் அதில் திமுக சின்னம் பொறித்த தொப்பி கி செயின் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு 25 லட்சம் என்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா கொடுத்த தகவலின் படி வழக்கு பதிவு செய்து கார் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். 


பின்னர் முறையான ஆய்வுக்கு பின் இதன் மதிப்பு 53 ஆயிரத்து 500 என மதிப்பீட்டுள்ளனர். அரசுத்துறையில் பணியாற்றும் அதிகாாிகள் இது போன்ற மதிப்பீடுகள் தொியாமல் கடமைக்கு பணியாற்றுவதன் மூலம் பல்ேவறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்வதற்கு தயாராகி வருகின்றன.


 மேலே குறிப்பட்டுள்ள படி பாதிக்கப்பட்ட திமுக ஓன்றிய செயலாளர் தலைமை கழகத்தின் உத்தரவிற்கிணங்க தவறான தகவல்களை தொிவித்து செய்த வழக்குக்காக நீதிமன்றத்தை நாடவுள்ளாராம்.


 இதனால் அதிகாாிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக