ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

ஆல் கேன் டிரஸ்ட் ன் 300வது வார மரம் நடும் பணி சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வாராவாரம் தொடர்ந்து 


ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் நட்பு குழுவினர் சாலையோரமாக மரம் நடும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






இன்று (11-2-2024)ஆல் ஸ்கேன் டிரஸ்ட் சார்பில் இறுன் 300வது வார மரம் நடும் பணி தூத்துக்குடி பிரையன்ட் நகர் இரண்டாம் தெருவில் இன்று 11.02.2024 மேயர் ஜெகன் பெரியசாமி  தலைமையில் நடைபெற்றது.இதில் தலைமை தாங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி மரநட்ட அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போற்றி அழகு பார்த்தது அனைவரையும் நெகிழ செய்தது.

பொதுவாக... எதுவும் விழா என்றால் விழா தலைவருக்கு தான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க படுவார் 


ஆனால் இன்று நடைபெற்ற மரம் நடும் விழாவில் .. மேயர் ஜெகன் பெரியசாமி 

 பசுமை ஆர்வலர்கள் அனைவரையும் தனித்தனியாக கௌரவித்தது சிறப்புமிக்க பெருமையாக இருந்தது என்றார்கள்.

 முன்னதாக விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல்  சிறப்பாக செய்திருந்தார்.

 தூத்துக்குடி லீக்ஸ் செய்திகளுக்காக மா.அன்பரசன்B.A,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக