வியாழன், 29 பிப்ரவரி, 2024

நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்த வெற்றி உச்சநீதி மன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு #முதல்வர் ஸ்டாலின்

photo news by :-Arunan

நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்த வெற்றி #முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இதுபற்றிய செய்தியாவது :-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.


இந்த நிலையில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.



விதிமீறல்கள் பல இருப்பதால்தான் அரசு மற்றும் ஐகோர்ட்டு உரிய முடிவு எடுத்துள்ளது என்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று என்றும் கூறிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.


மேலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை ஐகோர்ட்டு சிறப்பாக கையாண்டதாக பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை என்றும் கூறியுள்ளனர்.


இந்த நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:


 தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.


 நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி

இது எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!"


இவ்வாறு தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக