செவ்வாய், 16 ஜனவரி, 2024

நள்ளிரவில் கொள்ளைதூத்துக்குடி பகீர் பரபரப்பு தூத்துக்குடியில் டாஸ்மார்க் கடையை உடைத்து ஒரு லட்சம் பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளையடிப்பு பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் 17-1-2024

நள்ளிரவில் கொள்ளை பகீர் பரபரப்பு

தூத்துக்குடியில் துணிகரமாக  டாஸ்மார்க்  கடையை உடைத்து ஒரு லட்சம் பணம் மற்றும் மதுபாட்டில்கள் திருடி சென்றுள்ளனர்

தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  



தூத்துக்குடி இரண்டாம்  ரயில்வே கேட் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை மர்ம நபர்கள் நள்ளிரவில் உடைத்து சுமார் ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் மது பாட்டில்களை திருடி சென்றுள்ளார்கள்.



தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் அருகே உள்ள சத்திரம் தெருவில் அரசு மதுபான கடை இருக்கின்றது.

 இந்த கடையில் பொங்கல் திருநாள் முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைப்பு என்பதால் நேற்று விற்பனை அதிக அளவில் நடந்துள்ளது. 


 நேற்று இரவு 10 மணி அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றுள்ளனர். 



இந்நிலையில் அந்த கடையின் டாஸ்மாக் சூப்பர்வைசர் சோமசுந்தரம் இன்று அதிகாலை கடை பகுதிக்கு சென்று பார்க்கும் போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது


இதை தொடர்ந்து வட பாகம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் வந்து சோதனை நடத்தினர்



இதில் டாஸ்மாக் கடையில் இருந்த பணம் சுமார் ஒரு லட்சம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

 இதை தொடர்ந்து பரபரப்பு உண்டானது.

 இந்த திருட்டு சமபவம் தொடர்பாக காவல்துறையினர் அரசு மதுபான கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



 தூத்துக்குடி நகரில் எப்போதும்  மக்கள் கூட்டம் மிகுந்த  பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கொள்ளை போய் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக