திங்கள், 21 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட சிவ குளம் பகுதியில் கனிமொழி எம்.பி ரூ 2 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து மரக்கன்று நட்டினார்.அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 thoothukudi leaks:-21-8-2023

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர்


 தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட சிவ குளம் பகுதியில் கனிமொழி எம்.பி  ரூ 2 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து மரக்கன்று நட்டினார். 

குட்டத்து மாடசாமி திருக்கோவில் குளம் கனிமொழி எம்பி ஆய்வு



அவருடன் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


இதுபற்றி செய்தியாவது:-

      தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட சிவ குளம் தூர்வாரப்பட்டு பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


குறிப்பாக பண்டுகரை பகுதியில் இரண்டரை கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் தங்களது ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக “நமக்கு நாமே திட்டம் 2022- 23 கீழ்” 2 கோடி மதிப்பில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நிறைவு பெற்றது.

கனிமொழி எம்பி மரக்கன்று நடுகிறார்


அதையொட்டி நடைபாதையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்.பி திறந்து வைத்து குளத்தின் கரையோர பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக பல்வேறு வகையான 300 மரக்கன்றுகள் நட்டி தொடங்கி வைத்தார்.

அமைச்சர் கீதாஜீவன் மரக்கன்று நடுகிறார் 

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நடுகிறார் 


      நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர்கள் காந்திமதி, மும்தாஜ், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், தாசில்தார் பிரபாகர், 



பகுதி திமுக செயலாளர் சிவகுமார், மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், திமுக வட்டச்செயலாளர்கள் ரவிந்திரன், ராஜாமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக