சனி, 8 ஜூலை, 2023

திருச்செந்தூர் முருகனிடம் எடப்பாடி பழனிச்சாமி பலமான வேண்டுதல் செலுத்தினார்

 thoothukudi leaks 9-7-2023



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தரிசனத்திற்காக தூத்துக்குடி வருகை தந்த அதிமுக பொது செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.  பழனிசாமி அவரை  தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில்  தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

நேற்று 8-7-2023 திருச்செந்தூர் கோவில் சுப்பிரமணியசாமி தரிசனம் செய்ய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்தார்.

 அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் திரளான அதிமுகவுடன் வரவேற்பு அளித்தனர். 

அதன் பின்பு அதிமுகவினர் கார் மற்றும் வேன்  வாகனங்களில் அதிமுக கொடி கட்டிவாறு திருச்செந்தூர் கோயிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி உடன் பின் சென்றனர்.

திடீர் வருகை பற்றி...

திருச்செந்தூர் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும் இங்கே திருச்செந்தூர் சுப்பிரமணி சாமி முருகன் கோயில் எதிரிகளை வேல் கொண்டு வீழ்த்தி  சூரம்காரம் பண்ணி வீற்றிருக்கிறார் 

ஆகவே இக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் எதிரிகளை வீழ்த்தி அழித்திட  தங்களை காத்து அருள் புரிய திருச்செந்தூர் முருகனை வேண்டி சரணடைவர் என்ற ஜதீகம் உண்டு.

எடப்பாடி பழனிச்சாமி தனது கால்வலி குணம் தீர  என வேண்டுதல் கூறப்படுகிறது இருந்தாலும் திருச்செந்தூர் கோவி லில் எடப்பாடி பழனிச்சாமி  தன்னுடைய பலமான வேண்டுதலை நிறைவேற் றும் செய்யத்தான் வந்துள்ளார்.

அருகாமையில்அவரின் உருக்கமான வேண்டுதலை பார்க்கும் போது தெரிகிறது.!!!!.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக