thoothukudileaks 19-2-2023
Arunan journalist
விதி எண் 3
திரைப்பட விமர்சனம்
நமது பார்வையில்...
விதி எண் 3 என்று
தலைப்பு எதற்கு வைத்தார்கள் என தியேட்டரில் படம் பார்த்து..? முழுசாய் வெளியில் வந்த ரசிகர்களுக்கு புரியவில்லை. இது இயக்குநர் ரகசியம்
படத்தில் கிட்டதட்ட தூத்துக்குடி நகர சுற்றுவட்டார வாசிகளே நடித்துள்ளார்கள். திரைப்படத்தில் நீதிபதி மற்றும் வக்கில் வேடங்களில் நடித்தவர்கள் அனைவரும் தூத்துக்குடியில் பணிபுரியும் நிஜ வழக்கறிஞர்கள். ஏனோ சினிமா ஆசை அவர்களையும் விட்டு வைக்காமல் பாடாய் படுத்தியிருக்கிறது.
உள்ளூரில் உள்ளவர்கள் இவர்கள் நடிப்பை பார்த்து செம கமெண்ட் பின்னியெடுக்கிறார்கள்.
என்னத்த சொல்ல!!!!
இளம் பெண்கள் விழிப்புணர்வு படம் பார்க்க வேண்டிய படம் என அதில் நடித்துள்ளவர்கள் பலர் ஏற்றி விட்ட பில்டப்
தொல்லை தாங்காமல் தியேட்டருக்கு சென்று பார்த்தால் திரையில் மது குடியர்கள் உடன் பெண் கீழே படுத்து எழுந்து மசாலா அயிட்டம் ஸாங். அதுவும் கொச்சையான ஆடியோ முலம் வெளியில் வந்த டிக்டாக் திருச்சி சூர்யா படத்தில் மதுகோப்பையுடன் டான்ஸ்.
இது தான் படத்தின் ஸ்பெஷல்
அடுத்து படத்தில் போலீஸ் துறை பற்றி நன்கு அலசி உள்குத்து அப்ளிகேஷன்ஸ் கூட கூறியுள்ளார் கள்.
உதாரணம் நடிகர் ஜெயம் எஸ்பி யாக அல்டிமேட் நடிப்பு வில்லன் கைது செய்யப்படும் போது எஸ்பி க்கு போன் பண்ணி இரவில் கைது பண்ண சொல்லி சலுகை கேட்டு... அதற்கு கிராண்ட்டடு என ஒப்புதல் வழங்கும் எஸ்பி தோரணை பெஸ்ட் ஆக உள்ளது.
இன்ஸ்பெக்டர் ஆக பாபா சங்கர் அவர் வக்கீல் உடன் எடுக்கும் நடவடிக்கை கடைசி யில் வழியில் செல்லும் வக்கீல் சாதரணமாக ஜீப்பில் ஏறுங்கள் ஏற்றி அவரை தப்பிக்க விடாமல் லாட்ஜ் ல பூட்டி ரூம் பாய் கஸ்டடியில் வைத்து வக்கில் -ஜ நீதிமன்றம் செல்லாமல் தடுப்பது இன்ஸ்பெக்டர் பாபா சங்கர் நடிப்பு சூப் பர்
படத்தின் கதை என்னவெனில் ...
அட கதையா? நீங்க வேற சமீபத்தில் வெளிவந்த சாதி விமர்சனங்களை சந்தித்த திரவுபதி படத்தின் கதையும் நடிகை நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படத்தின் கதையும் தான். இதில் கொடுமை இந்த நெற்றிக்கண் கதையே சைனா படத்தில் இருந்து சுட்டதுதான் ?
மேற்கண்ட இரண்டு படங்களை தயாரிப்பாளர் பார்த்து இருந்தால்? திரைப்படம் வெளிவந்திருக்குமா டவுட் தான்.
இதில் தான் இயக்குநர் திறமை பளிச் சென்று தெரிகிறது.
பல இடங்களில் திரைக்காட்சிகள் நடிகர் நடிகைகள் பேசுவது கூட அட்வேஸ் டயலாக் ஆக இருக்கிறதால் ரசிகர்கள் கதையோட்டத்தை புரியாமல் தவிப்பு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இசை சண்டை காட்சிகள் மற்றும்
நீதிமன்ற காட்சிகள் நன்றாக வர பிரத்தேகபட்டுள்ளார்கள்.
ஆனால் முடியல ?
கடைசி வரை வில்லன் வயலின் வாசித்து கொண்டே வருகிறார் வயலின் வாசித்தே வெறுப்பேற்றுகிறார் மாணவி வரும் காட்சிகளில் வில்லன் காலில் சலங்கை கட்டுவதும் உதட்டில் லிப்ஸ்டிக் என வில்லன் திருநங்கையா ? .
அப்படி யாரால் மாணவி பாலியல் போக்சோ வில் வருமா?!
இதற்கு பின் வக்கீல் வாதம் எடுபடுமா!!!!
என்ன ரகம் என்றே இயக்குநர் க்கு காட்சி அமைப்பு திணறுதல் தெரிகின்றது.
சினிமா பார்முலாவில்
பொதுவாக காண்பிக்கப்படும்
நீதிமன்ற காட்சிகளில்..
குற்றவாளி கூண்டு இல்லை
மிஸ்ஸிங் மகாத்மா காந்தி போட்டோ நீதி தேவதை இது எதுவுமில்லை
மேடை அமைப்பு போல் வெறுமை தோற்றம்.
தூத்துக்குடி ஊர் என்பது நடிப்பு மாமேதை சந்திரபாபு தந்த இடத்தில் இருந்து திரைத்துறைக்கு கிளம் புவர்கள்
வாட்ஸ் அப்-ல வரும் காப்பி பேஸ்ட் போல் பண்ைாமல் தங்கள் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்தல் அவசியம் அடுத்த படத்திலாவது எதிர்பார்க்கலாமா? என்ற கேள்வி நம்முள் எழுகிறது.
செய்வார்களா? பார்ப்போம். வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக