காலங்காலமாக பெண்களை இழிவுசெய்யும் மனுதர்ம நூலைத் தடை செய்ய வலியுறுத்தி பரமன்குறிச்சி பஜாரில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் மாபெரும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் தோழர் விடுதலைச்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி இராவணன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரகுவரன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் உடன்குடி ஒன்றிய அமைப்பாளர் முத்துச்செல்வன், சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர், தொழிலாளர் விடுதலை முன்னணியின் ஒன்றிய அமைப்பாளர் சிவநாதன், மாநாடு முகாம் இளஞ்சிறுத்தைகள் ஆத்திமுத்து, சுதாகர் உள்ளிட்ட தோழர்கள், முந்திரிதோட்டம் முகாம் தோழர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி விண்ணதிர முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை திடுமெனக் கைதுசெய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்து பின்புவிடுவித்தனர்.
இளஞ்சிறுத்தைகளின் போராட்டத்தால் பரமன்குறிச்சி பஜாரில் 1-மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான...
வீடியோ பாக்க.....
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக