தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் கொலை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் 29 பேரும்,பாலியல் வன்முறை போன்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 7 பேரும், கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் சம்மந்தப்பட்டவர்கள் 7 பேரும் மற்றும் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் 2 பேரும் ஆக மொத்தம் 45 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய 313 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம்
107ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டும், அதே போன்று குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் 109ன்படி திருட்டு, கன்னக்களவு மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடியவர்கள் 43 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டும், வழக்கமாக சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடிய ரவுடிகள் 481 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் 110ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் முன்னெச்சரிக்ககை நடவடிக்கையாக 837 பேர் மீது குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில்
ஈடுபட்டவர்கள் என 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 73 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 7,30,500/- (ரூபாய் ஏழு லட்சத்து முப்பதாயித்து ஐநூறு) ஆகும்.
மேற்படி வழக்குகளில் பயன்படுத்திய 10 இரு சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
இதில் ஈடுபட்டுள்ள முக்கிய எதிரிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள், சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி, ஆடியோ மற்றும் வீடியோ வெளியிட்டு ஜாதி, மத மோதல்களை தூண்டுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக