தூத்துக்குடி அக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூத்துக்குடி அக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 பிப்ரவரி, 2024

தேசிய பெருவிழாவில் தூத்துக்குடி அக்காவுக்கு விருது!! வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!!!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்களால் தூத்துக்குடி அக்கா என அழைக்கப்படும் பேராசிரியர் பாத்திமா பாபு - க்கு தமிழ் கனலி விருது வழங்கப்பட்டது.




இது பற்றி செய்தியாவது:-

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி அக்கா -வுக்கு தமிழ் கனலி விருது.

தூத்துக்குடி பெ.28

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக 25 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் போராடி வருபவரும் பேராசிரியர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர், சூழலியல் உரிமை, எளிய மக்களின் உரிமைகளுக்காக இயங்குபவர், சிறை தண்டனை - வழக்குகளை எதிர்கொண்ட போதிலும் தொடர்ந்து போராடும் போராளி

பேரா.பாத்திமா பாபு


கடந்த 25-2 - 2024 ஞாயிறு அன்று மாலை சென்னை சைதாபேட்டை காரணிஸ்வர் கோவில் தேரடியில்  மே பதினேழு இயக்கம் சார்பில் தேசிய பெரு விழா நடைபெற்றது.

விருது நிகழ்ச்சி காணொலி பார்க்க

.அந் நிகழ்ச்சியில் தமிழின ஆளுமைகளுக்கு சிறப்பு செய்தல் விருது விழா வழங்க பட்டது



அதில் தூத்துக்குடி அக்கா பேராசிரியை பாத்திமா பாபு அவருக்கு "தமிழ் கனலி செயல்பாட்டாளர் விருது" வழங்கினர்


பலத்த கரகோஷத்துடன் விருது பெற்றார்.





தற்போது தூத்துக்குடி அக்கா போராசிரியை பாத்திமா பாபு -க்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அனைவரும் தெரிவித்து வருகிறார்கள்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

தூத்துக்குடி அக்கா அதகளமான.. பிறந்த நாள் கொண்டாட்டம் தெருவில் காத்து கிடந்தது காவல் துறை!!!

  thoothukudileaks 20-1-2023

photo news by arunan 

தூத்துக்குடி அக்கா வின் அதகளமான.. 

 பிறந்த நாள் கொண்டாட்டம் தூத்துக்குடி மஹாலில்  நேற்று 2023பெப்ரவரி19 நடைபெற்றது .

 


இதுபற்றிய செய்தியாவது -


தன்னுடைய வாழ்நாளை தூத்துக்குடி மக்களுக்காக அர்ப்பணிப்புடன் தன்னலம் கருதாமல் 35 வருடங்களாக நேர்நிலை களப்போராளி இருந்து வருகிறார் தூத்துக்குடி அக்கா.


தூத்துக்குடி அக்கா 


இப்படி தான் தூத்துக்குடி மட்டுமல்ல தமிழகத்தில்  உள்ள அரசியல் வாதிகள் செய்தியாளர்  கூட அனைவரும்  அழைத்து வருவது பேராசிரியர் பாத்திமா பாபு அவர்களை மட்டும் தான்.



இவருடைய பிறந்த நாள் எப்போதும் இல்லாமல் இந்த தடவை ஸ்பெஷல் ஆக அதகளமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


நேற்று பெப்ரவரி 19 தூத்துக்குடி அக்கா பாத்திமா பாபு பிறந்த நாள் தூத்துக்குடியில் உள்ள மஹாலில் மாலை நேரம் தூத்துக்குடி அக்கா பிறந்த நாள் கொண்டாட வேண்டும் பலரும் விரும்பினார்கள்.

ஏனெனில் காலையில் இருந்தே..

 வாட்ஸ்அப் தளங்களில் பிறந்த நாள் வாழ்த்து செய்தி குவிந்து கொண்டு இருந்தது



அவர்கள் விருப்பங்கள் தட்ட முடியாமல் தூத்துக்குடி மஹாலில் வர சம்மதம் தெரிவித்தார் மஹாலில் தூத்துக்குடி பேராசிரியர் பாத்திமா பாபு அவரிடம் படித்த மாணவி உறவினர் அவரது ஆதரவாளர்கள் மற்றும் நகர வியாபாரிகள் விசைப்படகு தலைவர்கள் அரசியல் கட்சி சேர்ந்த மாவட்ட தலைவர் கள் பத்திரிகையாளர் ஆகியோர் முன்னிலையில்.. தூத்துக்குடி அக்கா பாத்திமா பாபு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.




 இந்த நிகழ்ச்சியில் ...

 தூத்துக்குடி அக்கா கடந்த வந்த ஆண்டுகளில் தங்கள் உடன் இக்கட்டான தருணங்களில் கூட பேசிய உடன் இருந்த  நிகழ்வுகள் கூறி பெருமைபடுத்தினர.

 பின்பு பரிசு பொருட்கள் மற்றும் போட்டோ ஷீல்டு வழங்கினார்கள்.

 வந்திருந்தவர் அவரிடம் தூத்துக்குடி அக்கா வின் உண்மையான வயது என்ன? என்ன?  என்று  கேட்டு கலாய்த்து அதகளம் பண்ணி கொண்டிருந்தார்கள்.


நிகழ்ச்சி நிறைவில் .. எல்லாம்  முடியும் நம்மால் மட்டுமே நம் ஒவ்வொருவருரின் தன்னம்பிக்கையும் வாழ்வில் உறுதியாக வெற்றி பெற வைக்கும் கண் கலங்கிய வாறு வந்து இருந்த அனைவருக்கும் ரொம்ப நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.தூத்துக்குடி அக்கா பேரிசிரியை பாத்திமா பாபு.


தூத்துக்குடி காவல்துறை தூத்துக்குடி அக்கா வின் பிறந்த நாள் நிகழ்வு தகவல்கள் தெரிந்து கொண்டு மஹாலில் இருக்கும் தெருவில் காத்து கிடந்ததார்கள்.