தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி
photo news by Arunan journalist
தூத்துக்குடி, ஏப். 6:
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக சித செல்லப்பாண்டியன் இன்று தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி சப் கலெக்டர் அலுவலகத்தில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் பிரபு விடம் அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதனை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக, நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து பேரணி அமைத்து சப் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தார்.
அப்போது ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித செல்லப்பாண்டியன்,
“மக்களின் நம்பிக்கையை வென்று, தூத்துக்குடி தொகுதியில் வளர்ச்சியை கொண்டு வர உறுதி மேற்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நிகழ்வுகள் மாவட்டத்தில் அரசியல் சூழலை பரபரப்பாக மாற்றியுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக