திங்கள், 6 ஏப்ரல், 2026

வேட்பு மனுத் தாக்கல் இன்று பரபரப்பு தூத்துக்குடியில் காவல்துறையினருடன் அதிமுகவினர் மோதல்

 தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஏப்ரல் 6:

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளில் தூத்துக்குடியில் பரபரப்பான சம்பவம் ஏற்பட்டது.

வேட்பு மனுத் தாக்கல் இன்று  பரபரப்பு: தூத்துக்குடியில் காவல்துறையினருடன் அதிமுகவினர் மோதல் ஏற்பட்டது 

அதிமுக -காவல்துறை மோதல் 

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், டுவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சப் கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தார்.

thoothukudileaks


தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. 

வெளியேறுங்கள் !!!

இதன்படி அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கூடுதலாக ஒருவர் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு, “ஒருவர் வெளியே சென்றால் மட்டுமே வேட்பு மனு பெற முடியும்” என தெரிவித்தார்.


இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவேகம் ரமேஷ் உள்ளிட்டோர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றபோது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். “ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது” என கூறியதால், அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


இதையடுத்து வெளியே இருந்த விவேகம் ரமேஷ் அழைத்ததன் பேரில், வேட்பாளர் செல்லப்பாண்டியன் வெளியே வந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 “என்னை வேட்பு மனுத் தாக்கல் செய்ய விடாமல் தடுக்கிறீர்களா?” என அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விதிமுறைகளை விளக்கியும், வாக்குவாதம் சில நேரம் நீடித்தது.

இதே நேரத்தில், அலுவலகத்துக்குள் இருந்த முன்னாள் நகர மன்ற தலைவர் இரா. ஹென்றி அவரை சிலர் வெளியே செல்லும்படி காவல்துறையினர் வெளியேற்றினார்கள்.


மோதல்!!!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹென்றியும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அலுவலகத்திற்குள் தொடங்கிய இந்த வாக்குவாதம் வெளியிலும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.


சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த வாக்குவாதம் பின்னர் அமைதியானது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைகளை காவல்துறையினர் கடைப்பிடித்த நிலையில், இந்த வாக்குவாதம் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


✍️ Thoothukudi Leaks செய்தியகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக