வெள்ளி, 10 ஏப்ரல், 2026

ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதனுக்கு பெருகும் மக்கள் ஆதரவு

#Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஏப்ரல் 10

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதன் தீவிரமான சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

thoothukudileaks


தொகுதியின் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் அவர், மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டறிந்து வருகிறார்.

thoothukudileaks


அவரின் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதுடன், தினந்தோறும் ஆதரவாளர்கள் திரளாக இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

thoothukudileaks


இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதனின் பிரச்சாரம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதால் தேர்தல் போட்டி பரபரப்பாகி வருகிறது.


வீடியோ பார்க்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக