Tamil Nadu updates, Arunan journalist
🗞️ தூத்துக்குடி லீக்ஸ் | 23 பிப்ரவரி 2026
தூத்துக்குடி பெ 23
துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி, இரு நீதிமன்றத் தீர்ப்புகள் — இதற்குப் பிறகும் நச்சு ஆலையை மீண்டும் திறக்க சூழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிலும், நீதிமன்றத்திலும், அரசு அலுவலகங்களிலும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றக் கோரி இடைவிடாது போராடி வருகின்றனர்.
![]() |
| மதிமுக தலைவர் வைகோ உடன் ... |
மே 22, 2018 அன்று அமைதியான போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மே 28, 2018 அன்று தமிழக அரசு ஆணையின்படி ஆலை மூடப்பட்டது.
ஆகஸ்ட் 18, 2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம், "சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முரண்பாடு ஏற்படும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என தீர்க்கமான தீர்ப்பை வழங்கியது.
இதை வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்தபோது, "மறுபரிசீலனைக்கு எந்த முகாந்திரமும் இல்லை" என உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
மீண்டும்!!!
இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் இப்போது "கிரீன் காப்பர் — பசுமை மீள்தொடக்கம்" என்ற புதிய போர்வையில் ஆலையை மீண்டும் செயல்படுத்த முயற்சிக்கிறது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கடுமையாக சாடியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் கள்ளத்தனம் !!!
இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், "பழைய கள்ளத்தனத்திற்கு புதிய மொந்தை போட்டு மாற்ற முயல்கின்றனர்.
2021 கோவிட் நெருக்கடி காலத்தில் ஆலை நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 1050 MT ஆக்சிஜன் தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் உண்மையில் 90 MT கூட உற்பத்தி செய்ய முடியவில்லை" என்று அம்பலப்படுத்தியுள்ளனர்.
மக்கள் இயக்கம் அரசிடம் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான் — இந்த ஆலையை அடியோடு அகற்றுங்கள். "பசுமை மீள்தொடக்கம்" என்ற விஷப்பரீட்சையை மக்களின் போராட்டத்தின் மேல் திணிக்காதீர்கள்!
![]() |
| தோழர் திரு உடன் |
![]() |
| சௌந்தரராஜன் மாநில தலைவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை |
![]() |
| விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் |






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக