Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி:பெ 24
மறைந்த தமிழக முதல்வர், இதய தெய்வம், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை 10 மணியளவில் சிறப்பான விழா நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, விழா கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக பங்கேற்றனர்.
மேலும், அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளிலும் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் உற்சாகமாக ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக