ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

மாப்பிள்ளையூரணியில் மகளிர் அணி சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி விழா – 500க்கும் மேற்பட்டோருக்கு நலப்பொருட்கள் வழங்கல்

Tamil Nadu updates 22-2-2026

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி பெ22

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகர் குடியிருப்புப் பகுதியில் மகளிர் அணி சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மக்கள் சேவகன்  தளபதி A. சுதாகர்  கலந்து கொண்டு, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, சேலை உள்ளிட்ட அத்தியாவசிய நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

விழாவில் தூத்துக்குடி மத்திய மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் . விஜூ, தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர் கெளதம் பாண்டியன், . அருண்பிரகாஷ், . தீனதயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


மேலும், தூத்துக்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்  சேவியர், தூத்துக்குடி புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் . முனீஸ்வரன், புறநகர் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர்கள் அருண்குமார், கண்ணன், அருள் அஜய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் தூத்துக்குடி வடக்கு ஒன்றிய இணை செயலாளர். லெட்சுமணன், பொருளாளர் . சந்தன முத்து, செயற்குழு உறுப்பினர் . ராஜா மற்றும் நிர்வாகிகள் அருள் சஞ்சய், மணிகண்டன், ஈஸ்வர், பாஸ்கர், ரியால்சன், ஆனந்த், சந்தனம், ஹரி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் அப்பகுதி மகளிர் அணியினர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றுச் சென்றனர்.

thoothukudileaks


 நிகழ்ச்சி சமூக ஒற்றுமையையும் சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக