புதன், 21 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் செல்போன் வெடிக்கும் என வாட்ஸ்அப் ஆடியோ – மாவட்ட காவல்துறை மறுப்பு

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி : ஜனவரி 21

வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து 5 அல்லது 6 இலக்க நம்பரில் இருந்து வரும் அழைப்பை ஏற்றால் செல்போன் வெடித்து விடும் என்றும், தூத்துக்குடியில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறி வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ பரவி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெளிவான மறுப்பு தெரிவித்துள்ளது.

thoothukudileaks


தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வாட்ஸ்அப் ஆடியோவில்,

“ஹலோ, நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன்… கஸ்டமர் காலில் 5 அல்லது 6 நம்பரிலிருந்து அழைப்பு வருகிறது, அதை யாரும் அட்டென் பண்ணாதீங்க… அட்டென் பண்ணினால் பிளாஸ்ட் ஆகி செல்போன் வெடிக்கும்… தூத்துக்குடியில் 27 பேர் செத்துட்டாங்க… இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும், தற்போது பரவி வரும் ஆடியோ பழையது என்றும், அந்த தவறான தகவல் மீண்டும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உண்மை இல்லை!!!

எனவே பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும், இந்த பொய்யான வாட்ஸ்அப் ஆடியோவை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறை பொதுநலன் கருதி கேட்டுக் கொண்டுள்ளது.

எச்சரிக்கை!!!

மேலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக அல்லது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும், இந்த ஆடியோவை மீண்டும் பகிர்ந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக