தூத்துக்குடி, ஜனவரி 31 :
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வாள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, சாதி – மத மோதலை தூண்டும் செயல்களில் ஈடுபடுவோர்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (X), முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆயுதங்களை காட்சிபடுத்தி வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் இருபிரிவினருக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளடக்கங்களை பதிவிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2026 ஜனவரி மாதத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டப்படி குற்றம்!!!
மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆயுதங்களை காட்சிபடுத்தி வீடியோ, ரீல்ஸ் அல்லது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும்.
கடும் எச்சரிக்கை!!!
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் யாரும் இவ்வகை குற்றச்செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . சிலம்பரசன் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக