ஞாயிறு, 16 நவம்பர், 2025

மெஞ்ஞானபுரம் கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது — சிறையில் அடைப்பு

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் – 16.11.2025

மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 10.10.2025 அன்று இடம்பெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய 2 குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் today சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலைகண் மகன் கார்த்திக் (26) மற்றும் சாத்தான்குளம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம்  ஆறுமுகம் (51) ஆகிய இருவரும் குறித்த கொலை வழக்கில் முக்கிய எதிரிகளாக காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

thoothukudi leks
ச. ஆறுமுகம்


thoothukudi leks
சு.கார்த்திக்

இவ்விருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப.வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் இ.ஆ.ப. உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி இன்று (16.11.2025) மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, இரு எதிரிகளையும் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக