தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
சென்னை : ஆகஸ்ட் 23
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்,
“நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர் மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும்.
அரசியல் நடிப்பு!!!
‘தனி ஆள் இல்லை, கடல் நான்’ என்ற வாசகத்துடன் செல்பி பகிர்ந்த விஜய் முதலில் திருக்குறள், டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, இந்திய அரசியல் சாசனம், மாணவ தர்ஷன் இலக்கணம் ஆகிய நூல்களைப் படித்து புரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அவரது தற்போதைய அரசியல் நடிப்பு மக்களுக்கு பயனுள்ளதாக மாறும்” என தெரிவித்துள்ளார்.
மேலும்,
“மதுரை மாநாட்டில் விஜய் வைத்த உரை அரசியல் திரைப்பட உரை போல் இருந்தது. மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்லதே. ஆனால் விஜய் தேர்தல் வாக்கு வங்கி நோக்கத்துடன் செயல்படுகிறார். திமுக அரசின் தவறுகளை வெளிப்படுத்தாமல் விளம்பர அரசியலில் மூழ்கியுள்ளார்.
‘மிஸ்டர் -பி.எம்’, ‘அங்கிள்’ எனும் பேச்சுகள் அரசியலின் தரத்தை தாழ்த்துகின்றன. கடந்த காலத்தில் அரசியல் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்த விஜய், இப்போது மக்களை ஏமாற்றும் விதத்தில் நடந்து கொள்கிறார்” என்றும் விமர்சித்துள்ளார்.
அதோடு,....
“முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஊழல், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு ஆகிய பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றை எதிர்த்து குரல் கொடுக்கும் நிலைப்பாட்டில் விஜய் செயல்பட வேண்டும்.
ஒன்றரை ஆண்டுகளில் கட்சி தொடங்கி திடீர் முதல்வர் கனவில் மூழ்குவது பொருத்தமல்ல. மக்களின் நலனுக்காக செயல்படுவதே ஒரு உண்மையான அரசியல்வாதியின் கடமை” என்று கூறியுள்ளார்.
இறுதியாக,...
“தமிழக வெற்றிக்கழக தொண்டர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில், தீய சக்தியான திமுகவை வீழ்த்தும் பணியில் விஜய் ஈடுபட வேண்டும்.
அப்போதுதான் அவர் தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் நம்பிக்கைக்குரிய தலைவராக உயர வாய்ப்புண்டு” என பிரசாத் தெரிவித்துள்ளார்.
— தூத்துக்குடி லீக்ஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக