Tamil Nadu updates photo news by sunmugasuthram press club president
THOOTHUKUDI LEAKS |
புகார் கொடுங்கள் – அதிகாரிகள் உங்கள் வீடு தேடி வருவார்கள்
தூத்துக்குடி:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று 7-5-2025 நடைபெற்ற முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார்.
![]() |
| பழைய கோப்பு புகைப்படம் |
மேயர் ஜெகனின் முக்கிய அறிவிப்பு:
“பொதுமக்கள் ஆன்லைனில் புகார் அளிக்கலாம். அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று நடவடிக்கை எடுப்பார்கள். மக்களின் தேவை என்னவோ அதை நிறைவேற்றுவதே எங்கள் நோக்கம்.”
அவர் மேலும் கூறியது:
- கடந்த 11 மாதங்களில் 546 மனுக்கள் பெறப்பட்டு அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ளன.
- மே மாதத்துக்குள் புதிய சாலைகள் அமைக்கப்படும்.
- அனுமதியின்றி அமைக்கப்படும் பந்தல்களுக்கு அனுமதி இல்லை –
- பாதாள சாக்கடை பணிகள் 80% முடிந்துள்ளன. மீதமுள்ள 20% விரைவில் முடிக்கப்படும்.
- சாக்கடையில் பணியாளர்கள் இறங்க வேண்டிய நிலை இல்லை. இயந்திரம் மூலம் சுத்திகரிப்பு.
கலந்து கொண்டோர் முழுப் பட்டியல்:
- இணை ஆணையர் சரவணக்குமார்
- மண்டல தலைவர் நிர்மல் ராஜ்
- பொறியாளர் தமிழ்ச்செல்வன்
- உதவி ஆணையர் சுரேஷ்குமார்
- நகர அமைப்பு திட்ட பொறியாளர் ரெங்கநாதன்
- உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன்
- நகர்நல அலுவலர் சரோஜா
- சுகாதார ஆய்வாளர் ராஜசேகர்
- மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி
- சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார்
- பணிக்குழு தலைவர் கீதா முருகேசன்
- மாநகராட்சி கவுன்சிலர்கள்:
- தெய்வேந்திரன்
- நாகேஸ்வரி
- ஜெயசீலி
- கற்பக கனி
- அந்தோணி பிரகாஷ் மார்ஷலின்
- வட்டச்செயலாளர் ரவீந்திரன்
- வட்ட பிரதிநிதி புஷ்பராஜ்
- போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜெஸ்பர்
- மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டலத் தலைவர் சேகர்
பொதுமக்கள் நினைவில் வைக்க வேண்டியது:
“தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நாங்கள் மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய தயார். ஊக்கத்துடன் செயல்படுவோம்” என்று மேயர் வலியுறுத்தினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக