Tamil Nadu updates,புகைப்படம் காணொலி அருணன் செய்தியாளர்
மன்னிக்கவும் மாட்டோம்
மறக்கவும் மாட்டோம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு முற்றுகை போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக காவல்துறையில் உள்ள கயவர்கள் போராடிய அப்பாவி பொதுமக்களை அடித்து துன்புறுத்தியும் 15 பேர்களை துடிதுடிக்க சுட்டு கொன்றார்கள்.
ஏழு ஆண்டுகள் ஆகின்றன இனியும் தாமதிக்காமல் அவர்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும்.
உச்சி நீதிமன்றம் தீர்ப்பு படி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு தூத்துக்குடி மண்ணை விட்டு அகற்ற வேண்டும்
தமிழக அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதமாக தான் இருக்கின்றன
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அவமதிப்பு செய்வது போல ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் வேண்டும் சொல்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
என்ற கேள்விகள் ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் ஒங்கி ஒலித்தது
தூத்துக்குடி, மே 22:
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட
15 ஈகையர்களுக்கு ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று 2025 மே 22 தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்றது.
வீடியோ பார்க்க
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் (ASPM) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் உரையாற்றிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் போராசிரியை பாத்திமா பாபு கூறியதாவது:
“தூத்துக்குடியில் நம் சகோதரர், சகோதரிகள்
15 பேர் தங்கள் உயிரை தியாகம் செய்து இன்று தூத்துக்குடி மண்ணை காப்பாற்றியுள்ளார் கள்.
ஆனால், ஏழு ஆண்டுகள் கடந்தும் துப்பாக்கி சூடு நடத்திய உண்மையான குற்றவாளிக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை.
நீதிக்காக இன்னும் நாம் எத்தனை ஆண்டுகள் காத்து கிடக்க வேண்டும் தமிழக அரசு நடவடிக்கையில் ஏன் மெத்தனம்” என்றார்.
அவரது கோரிக்கைகள்:
1. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
ஏழு ஆண்டுகள் கடந்தும் ஏன்?
நீதி கிடைக்க வில்லை
2. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 15 ஈகையர்களுக்கு தூத்துக்குடி மாநகர மையத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும்.
3. ஸ்டெர்லைட் ஆலையை அரசு முற்றிலுமாக உடனே அகற்ற வேண்டும்.
அந்த இடத்தில் நச்சு வாயு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் அரசு மருத்துவமனை கட்டப்பட வேண்டும்.
வீடியோ பார்க்கநிகழ்வில் பலர் உரையாற்றினர்.
நாட்டுபடகு சங்கம் ரீகன் வணிகர் சங்கம் செயலாளர் தெர்மல் ராஜா, சங்குளி தலைவர் இசக்கி முத்து தமிழக வெற்றி கழகம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆர்கனல் மதிமுக மகாராஜன் பேச்சுமுத்து பாதர் செல்வராஜ் தங்கையா வழக்கறிஞர் மாடசாமி மற்றும் பல் வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி மக்களின் நீதி கோரும் குரல்
மன்னிக்கவும் மாட்டோம் மறக்கவும் மாட்டோம்
மேலும் வலுப்பெற்றுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக