Tamil Nadu updates, photo news by Arunan journalist
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறப்பு
தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திமுகவினர் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று (02.04.2025) தூத்துக்குடி ஆண்டாள் தெரு புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி தண்ணீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துனை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு பானாங்காரம், தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டு, வெயில் காலத்தில் மக்கள் சவால்களை சமாளிக்க உதவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனை பொதுமக்கள் பாராட்டியதுடன், திட்டமிட்ட முறையில் நீர் மோர் பந்தல் அமைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக