தூத்துக்குடி, ஏப்ரல் 30:
கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று காலை நடைபெற்ற சோதனையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீஹா தலைமையிலான குழுவினர் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.
இருவர் கைது!!!
இனாம் மணியாச்சி டவர் அருகில் சந்தேகத்திற்கிடமாக இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கயத்தாறு பணிக்கர்குளம் பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் இசக்கிமுத்து (21), நெல்லை தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் ரஞ்சித் (22) மற்றும் ஒரு இளஞ்சிறார் என்பது தெரியவந்தது.
மூவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இளச்சிறார்!!!
உடனடியாக போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர்.
இளஞ்சிறாரை திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
சம்பவ இடத்திலிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக