வெள்ளி, 24 ஜனவரி, 2025

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் மாரியப்பன்

TamilNadu updates 

news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம் : 24.01.2025


ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவல் ஆய்வாளர் மாரியப்பன் மீட்டு உயிரை காப்பாற்றி பாராட்டு பெற்றார்



தூத்துக்குடி: ஜனவரி 23

23.01.2025 அன்று 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆத்தூர் பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்று ஆற்றில் குதித்தார். 


இந்த  சம்பவம் குறித்து உடனடியாக தகவல் கிடைத்த ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர்  மாரியப்பன், தனது உயிரை பொருட்படுத்தாமல், உடனடியாக கயிறு கட்டி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து, அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார்.


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் பாராட்டு !!!

"இச் சம்பவத்தில்...

 தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் உடனடியாக  தனது உயிரை பணயம் வைத்து காவலர்கள் முனியசாமி மற்றும்  விக்னேஷ் ஆகியோரின் உதவியுடன் கயிறு கட்டி காவல் ஆய்வாளரும் ஆற்றில் குதித்து அப்பெண்ணை பத்திரமாக மீட்ட வீரதீர செயலால் பாராட்டும் பெற்றார்கள்

இன்று

(24.01.2025) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  சங்கர்ஜிவால் இ.கா.ப 


காவல் ஆய்வாளர்  மாரியப்பன் மற்றும் காவலர்கள்  முனியசாமி, விக்னேஷ் ஆகியோரை சென்னை காவல்துறை தலைமையகத்தில் வைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

 





அவரின் உழைப்பும் வீரத்தையும் மக்களும், பெரும் பாராட்டுடன் கவனித்துள்ளனர். 


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  காவல் ஆய்வாளரின் வீரதீர செயலுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவம் காவல்துறை அதிகாரிகளின் உறுதிப்பட்ட பணியாற்றும் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் மக்களின் வாழ்க்கையை காப்பாற்ற உதவுவதாக அமைந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக