தூத்துக்குடி CGE காலனியில் 342வது வார ALL CAN TRUST நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
தன்னார்வ இளைஞர்கள் படையுடன்!!!
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் சாலையோரங்களில் மரக்கன்று ஊன்றி வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இவருடன் தூத்துக்குடி தன்னார்வலர்கள் இளைஞர் கள் கைகோர்த்து வருகின்றன
இதனால் தூத்துக்குடி சுற்றுப்புற சூழல் முழுவதும் சுகாதாரமான காற்று சுவாசிக்க பாடுபடுகிறார்கள்.
இன்று!!
01.12.2024 ஞாயிறு காலை, காமாட்சி வித்யாலையா பள்ளி அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மஞ்சள் துணிப்பை!!!
மேலும், பள்ளி மாணவர்களும் ரோட்டரி கிளப் உறுப்பினர்களும் இணைந்து, பிளாஸ்டிக் பைகளை புறக்கணிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக, மஞ்சள் துணி பைகளில் காய்கறிகள் வழங்கும் முயற்சி நடாத்தப்பட்டது.
சுற்று சூழல் சமுகம்
இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரு முக்கியமான செய்தியை சமூகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது
கலந்து கொண்டோர்!!!
இந்நிகழ்ச்சியில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் தலைமையில் இளைஞர் கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
அருணன் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக